பதிவு செய்த நாள்
20 நவ2013
00:17
புதுடில்லி:பொதுத் துறையை சேர்ந்த பவர் கிரிட் கார்ப்பரேஷன் நிறுவனம், தொடர் பங்கு வெளியீடு மூலம், 5,700 கோடி ரூபாய் திரட்ட திட்டமிட்டுள்ளது.இவ்வெளியீடு தொடர்பான ஆவணங்கள், நிறுவன பதிவாளர் அலுவலகத்தில் தாக்கல் செய்யப்
பட்டுள்ளதாக, பங்குச் சந்தைகளுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
பவர் கிரிட் கார்ப்பரேஷன் நிறுவனத்தின், அளிக்கப்பட்ட பங்கு மூலதனத்தில், பங்கு வெளியீடு,17 சதவீதம், (10 ரூபாய் முகமதிப்பு கொண்ட, 78.70 கோடி பங்குகள்) என்ற அளவில் இருக்கும்.வங்கியின் அளிக்கப்பட்ட பங்கு மூலதனத்தில், புதிய பங்குகள், 13 சதவீதமாகவும் ( 60.18 கோடி), மத்திய அரசின் பங்குகள் 4 சதவீதம் (18.51 கோடி) என்ற அளவிற்கும் இருக்கும்.
தொடர் பங்கு வெளியீடு மூலம், பவர் கிரிட் கார்ப்பரேஷன் நிறுவனம், 5,700 கோடி ரூபாய் திரட்ட உள்ளது. இதில், மத்திய அரசுக்கு, அதன் பங்கு விற்பனை மூலம், 1,700 கோடி ரூபாய் கிடைக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.பவர் கிரிட் கார்ப்பரேஷன் நிறுவனம், நாடு முழுவதும், மின் கோபுரங்கள் வாயிலாக, மின் வினியோக பணியை மேற்கொண்டு வருகிறது. இந்நிறுவனம், அடுத்த இரண்டு நிதியாண்டுகளில் மேற்கொள்ள உள்ள திட்டங்களுக்கு தேவையான நிதியை திரட்டிக் கொள்ளும் பொருட்டு, தொடர் பங்கு வெளியீட்டில் இறங்குகிறது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|