பதிவு செய்த நாள்
20 நவ2013
00:18
மும்பை:அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு, சற்று உயர்ந்துள்ளது.
நேற்று முன்தினம், ரூபாய் மதிப்பு, 62.42ஆக இருந்தது. இந்த மதிப்பு, நேற்று, மேலும், 4 காசுகள் அதிகரித்து, 62.38 ஆக உயர்ந்தது.அன்னியச் செலாவணி வர்த்தகத்தின் துவக்கத்தில், ரூபாய் மதிப்பு, 62.34ஆக இருந்தது. இது, ஒரு கட்டத்தில், 61.88ஆக மிகவும் உயர்ந்து காணப்பட்டது.
அமெரிக்காவின் பொருளாதார ஊக்குவிப்பு திட்டங்கள் தொடரும் என்ற அறிவிப்பு, சீனா மேற்கொள்ளும் பொருளாதார மேம்பாட்டு நடவடிக்கைகள் போன்றவற்றால், இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகளில், அன்னிய முதலீடு அதிகரித்து வருகிறது.இதனால், டாலருக்கான தேவை குறைந்து, ரூபாயின் மதிப்பு அதிகரித்துள்ளது.இருந்தபோதிலும், கடந்த ஜனவரி முதல், இதுவரையிலுமாக ரூபாய் மதிப்பு, 12.03 சதவீதம் சரிவடைந்துள்ளது.
அமெரிக்க டாலருக்கு நிகராக, மதிப்பு குறைந்த ஆசிய கரன்சிகளில், ஜப்பானின் யென், இந்தோனேஷியாவின் ருப்யாவை அடுத்து, இந்திய ரூபாய் உள்ளது.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|