பதிவு செய்த நாள்
28 நவ2013
00:09
புதுடில்லி: மாருதி சுசூகி இந்தியா நிறுவனம், சென்ற அக்டோபரில் விற்கப்பட்ட, 1,492 கார்களை திரும்பப் பெற்று, 'ஸ்டியரிங்' பகுதியில் உள்ள கோளாறை, இலவசமாக சரி செய்து தருவதாக அறிவித்துள்ளது.
இது குறித்து இந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கை:கடந்த அக்டோபர் 19–26 வரை தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்ட, 1,492 கார்கள் ( எர்டிகா–306, ஸ்விப்ட்–592, டிசையர்–581, ஏ ஸ்டார்–13) திரும்ப பெறப்பட்டு ஆய்வு செய்யப்படும். அந்த கார்களின் 'ஸ்டியரிங்' பகுதியில் பழுது உள்ளது தெரிய வந்தால், அதை, நிறுவனம், இலவசமாக மாற்றித் தரும்.
இதற்காக, அனைத்து முகவர்களுக்கும், புதிய 'ஸ்டியரிங்' பகுதி அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.குறிப்பிட்ட நாட்களில் தயாரிக்கப்பட்ட கார்களில் மட்டுமே இந்த மாற்றம் செய்யப்படும். இதர கார்கள் அல்லது ஏற்றுமதி செய்யப்பட்ட கார்களுக்கு, இது பொருந்தாது. இது தொடர்பாக, மாருதி சுசூகி முகவர்கள், குறிப்பிட்ட வாகனங்களின் உரிமையாளர்களை தொடர்பு கொள்வர். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாருதி சுசூகி நிறுவனம், இதுவரை இல்லாத அளவில், கடந்த, 2010ம் ஆண்டு, அதன், 1 லட்சம் 'ஏ ஸ்டார்' கார்களை திரும்பப் பெற்று, பழுதான எரிபொருள் பம்ப் பாகத்தை மாற்றிக் கொடுத்தது என்பது, குறிப்பிடத்தக்கது.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|