பதிவு செய்த நாள்
28 நவ2013
00:15
மும்பை: அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு உயர்ந்துள்ளது.நேற்று முன்தினம் ரூபாய் மதிப்பு, 62.52ஆக இருந்தது. இந்த மதிப்பு, நேற்று, 36 காசுகள் அதிகரித்து, 62.16 ஆக ஏற்றம் கண்டது.நேற்று, அன்னியச் செலாவணி வர்த்தகத்தின் துவக்கத்தில், ரூபாய் மதிப்பு, 62.45ஆக உயர்ந்து காணப்பட்டது. இது, ஒரு கட்டத்தில், 62.10 வரை சென்றது.நேற்று, ரூபாய் மதிப்பின் சரிவை கட்டுப்படுத்த, ரிசர்வ் வங்கி, அதிக அளவில் டாலரை புழக்கத்தில் விடவில்லை. அதே சமயம், ஒரு சில அயல்நாட்டு வங்கிகள், டாலரை விற்பனை செய்தன. இதனால், ரூபாய் மதிப்பு உயர்ந்தது.நடப்பாண்டு ஜனவரி முதல், அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு, 11.65 சதவீதம் குறைந்துஉள்ளது. அதிகம் மதிப்பு குறைந்த ஆசிய கரன்சிகளில், இந்தோனேஷியாவின் ருப்யா, ஜப்பானின் யென் ஆகியவற்றை அடுத்து, இந்திய ரூபாய் உள்ளது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|