ஆபரண தங்கம் விலைசவரனுக்கு ரூ.104 குறைவுஆபரண தங்கம் விலைசவரனுக்கு ரூ.104 குறைவு ... இந்திய ரூபாயின் மதிப்பில் ஏற்றம் - ரூ.62.05 இந்திய ரூபாயின் மதிப்பில் ஏற்றம் - ரூ.62.05 ...
முக்கிய துறைகளின் உற்பத்தியில் கடும் சரிவு நிலை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

04 டிச
2013
01:03

புதுடில்லி: சென்ற அக்டோபர் மாதத்தில், முக்கிய எட்டு துறைகளின் உற்பத்தி, மைனஸ் 0.6 சதவீதம் என்ற அளவில் பின்னடைவை கண்டுள்ளது. அதேசமயம், கடந்த 2012ம் ஆண்டு இதே மாதத்தில், இத்துறைகளின் உற்பத்தி வளர்ச்சி, 7.8 சதவீதம் என்ற அளவில் மிகவும் அதிகரித்து காணப்பட்டது.
தொழில்துறை:நடப்பாண்டு செப்டம்பர் மாதத்தில், முக்கிய எட்டு துறைகளின் உற்பத்தி வளர்ச்சி, 8 சதவீதம் என்ற அளவில் இருந்தது. இந்நிலையில், கடந்த அக்டோபர் மாதத்திற்கான, நாட்டின் தொழில்துறை உற்பத்தி வளர்ச்சி குறித்த அறிவிப்பு, இம்மாதம் மத்தியில் வெளியிடப்பட உள்ளது.
சென்ற அக்டோபரில் முக்கிய எட்டு துறைகளின் உற்பத்தி, மைனஸ் 0.6 சதவீதம் என்ற அளவில் பின்னடைவை கண்டு உள்ளதால், அது, அக்டோபர் மாதத்திற்கான, ஒட்டு மொத்த தொழில்துறை உற்பத்தியில் கடும் தாக்கத்தை ஏற்படுத்தும் என, எதிர்பார்க்கப்படுகிறது.முக்கிய எட்டு துறைகளின் கீழ், நிலக்கரி, கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு, சுத்திகரிக்கப்பட்ட பெட்ரோலிய பொருட்கள், உரம், உருக்கு, சிமென்ட் மற்றும் மின்சாரம் ஆகியவை இடம்பெற்றுள்ளன.
நடப்பு 2013–14ம் நிதியாண்டில், ஏப்ரல் முதல் அக்டோபர் வரையிலான ஏழு மாத காலத்தில், முக்கிய எட்டு துறைகளின் உற்பத்தி வளர்ச்சி, 2.6 சதவீதம் என்ற குறைந்த அளவில் உயர்ந்துள்ளது. அதேசமயம், கடந்த நிதியாண்டின் இதே காலத்தில், இத்துறைகளின் உற்பத்தி வளர்ச்சி, 6.8 சதவீதம் என்ற அளவில் அதிகரித்து காணப்பட்டது என, மத்திய தொழில் மற்றும் வர்த்தக அமைச்சகம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மின்சாரம்:முக்கிய எட்டு துறைகளில் சென்ற அக்டோபர் மாதத்தில், உரம் மற்றும் உருக்கு ஆகிய இரு துறைகளின் உற்பத்தி ஓரளவிற்கு வளர்ச்சி கண்டுள்ளது.
அதேசமயம், சிமென்ட் மற்றும் மின்சாரம் ஆகிய இரு துறைகளின் உற்பத்தி வளர்ச்சி, கடந்தாண்டு அக்டோபருடன் ஒப்பிடும் போது, நடப்பாண்டின் இதே மாதத்தில் குறைந்துள்ளது.
கச்சா எண்ணெய்: அதேசமயம், நிலக்கரி, கச்சா எண்ணெய், சுத்திகரிக்கப்பட்ட பெட்ரோலிய பொருட்கள், இயற்கை எரிவாயு ஆகிய நான்கு துறைகளின் உற்பத்தி மிகவும் பின்னடைவை கண்டுள்ளன. இதற்கு எடுத்துக்காட்டாக, சென்ற அக்டோபரில், நிலக்கரி துறையின் உற்பத்தி, மைனஸ் 3.9 சதவீதம் என்ற அளவில் பின்னடைவை கண்டுள்ளது. இது, கடந்தாண்டின் இதே மாதத்தில், 11.6 சதவீதம் என்ற அளவில் வளர்ச்சி கண்டிருந்தது.இதே போன்று கச்சா எண்ணெய் துறையின் உற்பத்தி, மைனஸ் 0.4 சதவீதம் என்ற அளவில் இருந்து, மைனஸ் 0.8 சதவீதமாக பின்னடைவை கண்டுள்ளது.
இயற்கை எரிவாயு துறையின் உற்பத்தியும், மைனஸ் 14.9 சதவீதம் என்ற அளவில் இருந்து, மைனஸ் 13.6 சதவீதமாக பின்னடைவை கண்டுள்ளது.
மேலும், சுத்திகரிக்கப்பட்ட பெட்ரோலிய பொருட்கள் துறையின் உற்பத்தி, கடந்தாண்டு அக்டோபரில், 46.3 சதவீதம் என்ற அளவில் சிறப்பாக வளர்ச்சி கண்டிருந்தது. ஆனால், நடப்பாண்டு அக்டோபரில் இத்துறையின் உற்பத்தி, மைனஸ் 4.8 சதவீதம் என்ற அளவில் மிகவும் பின்னடைவை கண்டுள்ளது.
உர துறைகணக்கீட்டு மாதத்தில் உரத் துறையின் உற்பத்தி வளர்ச்சி, 2 சதவீதத்தில் இருந்து, 4.1 சதவீதம் என்ற அளவில் வளர்ச்சி கண்டுள்ளது.
உருக்கு துறையின் உற்பத்தி, மைனஸ் 4.7 சதவீதம் என்ற அளவில் இருந்து, 3.5 சதவீதமாக வளர்ச்சி கண்டுள்ளது.அதேசமயம், மதிப்பீட்டு மாதத்தில், சிமென்ட் துறையின் உற்பத்தி வளர்ச்சி, 6.8 சதவீதத்தில்இருந்து, 1 சதவீதம் என்ற அளவிலும், மின் துறையின் உற்பத்தி வளர்ச்சி, 5.6 சதவீதத்தில்இருந்து, 1.3 சதவீதம் என்ற அளவிலும் குறைந்துள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)