பதிவு செய்த நாள்
10 டிச2013
16:50
மும்பை : வாரத்தின் முதல்நாளில் முதலீட்டாளர்களுக்கு மகிழ்ச்சியை தந்த இந்திய பங்குசந்தைகள், இரண்டாம் சற்று ஏமாற்றத்தை தந்துள்ளது. சென்செக்ஸ் 71 புள்ளிகளும் நிப்டி 31 புள்ளிகளும் சரிந்தன.
ஐந்து மாநில சட்டசபை தேர்தல் முடிவில் பா.ஜ., அமோக வெற்றி பெற்றதை தொடர்ந்து இந்திய பங்குசந்தைகள் நேற்று கடும் ஏற்றம் கண்டன. இந்நிலையில் முதலீட்டாளர்கள் இதை மையமாக வைத்து லாபநோக்கோடு பங்குகளை அதிகளவு இன்று விற்க தொடங்கினர். இதனால் காலையில் சரிவுடன் துவங்கிய இந்திய பங்குசந்தைகள் இறுதியிலும் சரிவிலேயே முடிந்தன.மேலும் ஆசிய மற்றும் ஐரோப்பிய பங்குசந்தைகளில் காணப்பட்ட சரிவும் இந்திய பங்குசந்தைகளில் எதிரொலித்தன.
இன்றைய வர்த்தக நேர முடிவில் மும்பை பங்குசந்தையின் சென்செக்ஸ் 71.16 புள்ளிகள் சரிந்து 21,255.26-ஆகவும், தேசிய பங்குசந்தையின் நிப்டி 31.05 புள்ளிகள் சரிந்து 6,332.85-ஆகவும் முடிந்தது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|