பதிவு செய்த நாள்
13 டிச2013
01:33
இந்தியா, செவ்வாய் கிரகம் தொடர்பான விண்வெளி ஆய்வுப் பணிகளுக்கு ஒதுக்கிய, 450 கோடியில், சென்ற அக்டோபர் வரை,244.06 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது என, மத்திய இணை அமைச்சர் வி.நாராயணசாமி லோக்சபாவில் தெரிவித்தார்.
குறைவு:செவ்வாய் கிரக ஆய்வுக்கான மங்கள்யான் திட்டத்தில், உள்நாட்டு சாதனங்களின் பயன்பாடு மற்றும் குறைந்த பணியாளர் செலவினம் காரணமாக, திட்டச் செலவு பெருமளவு குறைந்துள்ளது.இது, அமெரிக்காவின் செவ்வாய் கிரக ஆய்வுக்கான 'மாவென்' திட்டச் செலவில், 10ல் ஒரு பங்குதான்.இந்தியாவில், நடப்பு, 12வது ஐந்தாண்டு திட்டத்தில், விண்வெளி ஆய்வுக்கு, 39,570 கோடி ரூபாய் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது, கடந்த, 11ம் ஐந்தாண்டு திட்டத்தில், 15,195 கோடி ரூபாயாக இருந்தது. இதர வளரும் நாடுகளுடன் ஒப்பிடும்போது, இந்தியாவின் விண்வெளி ஆய்வுச் செலவு மிகவும் குறைவு என, அமைச்சர் மேலும் கூறினார்.
விண்ணப்பம்:வரும், 2023ம் ஆண்டு, செவ்வாய்க் கிரகத்திற்கு செல்ல, தனியார் நிறுவனத்திடம், உலகம் முழுவதிலும் இருந்து, 2,02,586 பேர் விண்ணப்பித்துள்ளனர். இதில்,20 ஆயிரத்திற்கும் அதிகமானோர் இந்தியர்கள்.டென்மார்க்கை சேர்ந்த மார்ஸ் ஒன் என்ற நிறுவனம், வரும், 2023ம் ஆண்டு, செவ்வாய் கிரகத்தில், நிரந்தர குடியிருப்பை அமைக்க திட்டமிட்டுள்ளது. இதற்காக, நான்கு ஆண்கள், ஒரு பெண் ஆகியோர் அடங்கிய குழுவை, செவ்வாய் கிரகத்திற்கு அனுப்ப உள்ளது.இந்த பயணத்தில் பங்கேற்க, 140 நாடுகளை சேர்ந்த, 2,02,586 பேர் விண்ணப்பித்துள்ளனர். இதில், அமெரிக்கர்கள் முதலிடத்திலும் (24 சதவீதம்), இந்தியர்கள் இரண்டாவது இடத்திலும் (10 சதவீதம்) உள்ளனர்.
பயிற்சி:விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு, வரும், 2015ம் ஆண்டு, 6 –10 குழுக்கள் தேர்வு செய்யப்படும். இக்குழுக்களுக்கு, ஏழு ஆண்டுகள் பயிற்சி அளிக்கப்படும். இறுதியில் தேர்வாகும் நான்கு பேர் கொண்ட குழு, செவ்வாய் கிரகத்திற்கு பயணம் மேற்கொள்ளும்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|