குன்னுார் தேயிலை ஏலத்தில்ரூ.83 கோடி கூடுதல் வருமானம்குன்னுார் தேயிலை ஏலத்தில்ரூ.83 கோடி கூடுதல் வருமானம் ... ரூபாயின் மதிப்பில் சரிவு - மீண்டும் ரூ.62-ஆனது ரூபாயின் மதிப்பில் சரிவு - மீண்டும் ரூ.62-ஆனது ...
செவ்வாய் கிரக விண்வெளி ஆய்வுக்கு ரூ.244 கோடி செலவு : 20,000 இந்தியர்கள் செவ்வாய் செல்ல விருப்பம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

13 டிச
2013
01:33

இந்தியா, செவ்வாய் கிரகம் தொடர்பான விண்வெளி ஆய்வுப் பணிகளுக்கு ஒதுக்கிய, 450 கோடியில், சென்ற அக்டோபர் வரை,244.06 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது என, மத்திய இணை அமைச்சர் வி.நாராயணசாமி லோக்சபாவில் தெரிவித்தார்.

குறைவு:செவ்வாய் கிரக ஆய்வுக்கான மங்கள்யான் திட்டத்தில், உள்நாட்டு சாதனங்களின் பயன்பாடு மற்றும் குறைந்த பணியாளர் செலவினம் காரணமாக, திட்டச் செலவு பெருமளவு குறைந்துள்ளது.இது, அமெரிக்காவின் செவ்வாய் கிரக ஆய்வுக்கான 'மாவென்' திட்டச் செலவில், 10ல் ஒரு பங்குதான்.இந்தியாவில், நடப்பு, 12வது ஐந்தாண்டு திட்டத்தில், விண்வெளி ஆய்வுக்கு, 39,570 கோடி ரூபாய் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது, கடந்த, 11ம் ஐந்தாண்டு திட்டத்தில், 15,195 கோடி ரூபாயாக இருந்தது. இதர வளரும் நாடுகளுடன் ஒப்பிடும்போது, இந்தியாவின் விண்வெளி ஆய்வுச் செலவு மிகவும் குறைவு என, அமைச்சர் மேலும் கூறினார்.

விண்ணப்பம்:வரும், 2023ம் ஆண்டு, செவ்வாய்க் கிரகத்திற்கு செல்ல, தனியார் நிறுவனத்திடம், உலகம் முழுவதிலும் இருந்து, 2,02,586 பேர் விண்ணப்பித்துள்ளனர். இதில்,20 ஆயிரத்திற்கும் அதிகமானோர் இந்தியர்கள்.டென்மார்க்கை சேர்ந்த மார்ஸ் ஒன் என்ற நிறுவனம், வரும், 2023ம் ஆண்டு, செவ்வாய் கிரகத்தில், நிரந்தர குடியிருப்பை அமைக்க திட்டமிட்டுள்ளது. இதற்காக, நான்கு ஆண்கள், ஒரு பெண் ஆகியோர் அடங்கிய குழுவை, செவ்வாய் கிரகத்திற்கு அனுப்ப உள்ளது.இந்த பயணத்தில் பங்கேற்க, 140 நாடுகளை சேர்ந்த, 2,02,586 பேர் விண்ணப்பித்துள்ளனர். இதில், அமெரிக்கர்கள் முதலிடத்திலும் (24 சதவீதம்), இந்தியர்கள் இரண்டாவது இடத்திலும் (10 சதவீதம்) உள்ளனர்.

பயிற்சி:விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு, வரும், 2015ம் ஆண்டு, 6 –10 குழுக்கள் தேர்வு செய்யப்படும். இக்குழுக்களுக்கு, ஏழு ஆண்டுகள் பயிற்சி அளிக்கப்படும். இறுதியில் தேர்வாகும் நான்கு பேர் கொண்ட குழு, செவ்வாய் கிரகத்திற்கு பயணம் மேற்கொள்ளும்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)