பதிவு செய்த நாள்
04 ஜன2014
12:23
புதுடில்லி: நடப்பு நிதியாண்டின் ஏப்., டிசம்பர் வரையிலான ஒன்பது மாதங்களில், முன்னணி ஐந்து முன்பேர சந்தைகளில் மேற்கொள்ளப்பட்ட வர்த்தகம், 36 சதவீதம் சரிவடைந்து, 82,87,559 கோடி ரூபாயாக வீழ்ச்சி கண்டுள்ளது. இது, கடந்தாண்டின் இதே காலத்தில், 1,29,49,836 கோடி ரூபாயாக இருந்தது. இதன்படி, என்.எம்.சி.இ., முன்பேர சந்தையின் வர்த்தகம், 3.40 சதவீதம் சரிவடைந்து, 2,22,204 கோடியில் இருந்து, 2,14,655 கோடி ரூபாயாக வீழ்ச்சி கண்டுள்ளது.
ஏ.சி.இ., முன்பேர சந்தையின் வர்த்தகம், 74.09 சதவீதம் குறைந்து, 1,33,826 கோடியில் இருந்து, 34,673 கோடி ரூபாயாக சரிவடைந்துள்ளது. என்.சி.டீ.இ.எக்ஸ்., நிறுவனத்தின் வர்த்தகம், 35.07 சதவீதம் வீழ்ச்சியடைந்து, 13,06,411 கோடியில் இருந்து, 8,48,315 கோடி ரூபாயாக குறைந்துள்ளது. எம்.சி.எக்ஸ்., முன்பேர சந்தையின் வர்த்தகம், 36.35 சதவீதம் சரிவடைந்து, 1,11,96,361 கோடியில் இருந்து, 7,26,337 கோடி ரூபாயாக குறைந்துள்ளது. ஐ.சி.இ.எக்ஸ்., முன்பேர சந்தையின் வர்த்தகம், 3.40 சதவீதம் வீழ்ச்சி கண்டு, 2,22,204 கோடியில் இருந்து, 2,14,655 கோடி ரூபாயாக சரிவடைந்துள்ளது.
விளைபொருள் பரிமாற்ற வரி (சி.டி.டி.,) விதிப்பு, முன்பேர சந்தை செயல்பாடுகளில், முதலீட்டாளர்களுக்கு ஏற்பட்டுள்ள அதிருப்தி, பங்குச் சந்தைகளுக்கு முதலீடுகள் மாறியது போன்றவற்றால், முன்பேர சந்தைகளின் வர்த்தகம் குறைந்துள்ளது. இச்சந்தைகளின் மொத்த வர்த்தகத்தில், தங்கம், அடிப்படை உலோகங்கள், எரிசக்தி (எண்ணெய் மற்றும் எரிவாயு) ஆகிய மூன்று பிரிவுகள், 70 சதவீத பங்களிப்பை கொண்டுள்ளன. மதிப்பீட்டு மாதங்களில், மேற்கண்ட மூன்று பிரிவுகளின் வர்த்தகம், 35.91 சதவீதம் குறைந்துள்ளது. தங்கம் மீதான வர்த்தகம், 39 சதவீதமும், எண்ணெய் மற்றும் எரிவாயுவின் மீதான வர்த்தகம், 29.44 சதவீதமும் சரிவடைந்துள்ளது என, பார்வர்டு மார்க்கெட்ஸ் கமிஷன் (எப்.எம்.சி.,) வெளியிட்டுள்ள புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|