பதிவு செய்த நாள்
04 ஜன2014
14:05
இன்றைய நவீன கார்களில், மிக முக்கிய அம்சங்களில் ஒன்றாக உள்ளது பவர் விண்டோஸ். ஓட்டுனரின் கட்டுப்பாட்டில் காரின் எல்லா ஜன்னல்களையும் திறந்து மூடும் வசதி கொடுப்பதே, "பவர் விண்டோஸ்' என்றழைக்கப்படுகிறது.
பவர் விண்டோஸ், மின்சாரம் அல்லது பாட்டரியில் கிடைக்கும் சக்தியைக் கொண்டு, "சுவிட்ச்சுகள்' மற்றும் சில ஒயர்கள் மூலம் இயங்குகிறது. அதனால் தான், கார் "ஸ்டார்ட்' ஆகி இருந்தால் மட்டுமே "பவர் விண்டோஸ்' இயங்குகிறது. ஓட்டுனரின் கதவில் தான், சர்க்யூட் பிரேக்கரிலிருந்து வரும், அதிகபட்ச மின்சாரம் அல்லது பவர் உள்ளது.
இந்த பவர், "விண்டேர் சுவிட்ச் கண்ட்ரோல் பைனலுக்கு அனுப்பப்படுகிறது. இங்கிருந்து நான்கு ஜன்னல்களில் இருந்து வரும், ஒயர்கள் சேரும் இடத்துக்கு பவர் செல்கிறது. பின்பு இந்த பவர், வாகனத்தின் தரையில் ஒரு முனையும், ஜன்னல்களின் மோட்டாருக்கு ஒரு முனையும் செல்கிறது. ஓட்டுனர் தன் சீட்டுக்கு அருகில் உள்ள "சுவிட்சை' அழுத்தியவுடன், இரண்டு முனைகளில் வாகன தரையில் உள்ள முனை துண்டிக்கப்பட்டு, சென்டர் பவருடன், இணைகிறது. இதனால், பவர் எல்லா ஜன்னல்களுக்கும் கிடைக்கிறது.
இன்றைய பல சொகுசுக் கார்கள் "பவர் விண்டோஸ்', பவர் டோர்' மற்றும் பவர் மிர்ரருடன் வருகிறது. இம்முறையில் ஓட்டுனர் பட்டனை அழுத்தியவுடன், பவர் நேராக சென்ட்ரல் ஒயர் மாட்யூலுக்கு சென்று அங்கிருந்து, நான்கு ஜன்னல்களுக்கும் செல்கிறது.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|