பெட்ரோல், டீசல் விலை அதிரடி உயர்வுபெட்ரோல், டீசல் விலை அதிரடி உயர்வு ... அன்­னிய நேரடி முத­லீடு1,260 கோடி டால­ராக சரிவு அன்­னிய நேரடி முத­லீடு1,260 கோடி டால­ராக சரிவு ...
வர்த்தகம் » ஆட்டோமொபைல்
கனவுகளின் சக்தி ஹோண்டா!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

04 ஜன
2014
14:08

ஹோண்டா மோட்டார் நிறுவனம் என்பது, பேச்சு வழக்கில் ஹோண்டா என்று அழைக்கப்படுகிறது. ஆட்டோமொபைல் மற்றும் மோட்டார் சைக்கிள்கள் உற்பத்தியாளர்கள் என்று அறியப்படும் ஹோண்டா அதை தவிர்த்து இன்ஜின், ரோபார்ட், விமானம் போன்றவற்றையும் தயாரித்து வருகிறது.

ஜப்பானின் இரண்டாவது மிகப் பெரிய ஆட்டோமொபைல் உற்பத்தியாளர் எனவும், அமெரிக்காவின் நான்காவது மிகப் பெரிய ஆட்டோமொபைல் உற்பத்தியாளர் எனவும் பெயர் பெற்ற, ஹோண்டா நிறுவனம், உலக அளவில் ஆறாவது மிகப் பெரிய ஆட்டோமொபைல் உற்பத்தியாளர் என்ற சிறப்புடன் திகழ்கிறது.

ஹோண்டாவின் தொடக்கம்

கடந்த, 1984ல், சொய்செரோ ஹோண்டா என்பவரால், ஜப்பானில் துவங்கப்பட்ட ஹோண்டா மோட்டார் நிறுவனம், இன்று, உலகின் மிக முக்கியமான பிரபலமான நிறுவனமாக திகழ்கிறது. இன்று பலதரப்பட்ட தயாரிப்புகளை வழங்கும், ஹோண்டாவின் முதல் தயாரிப்பு, மோட்டார் பொருத்தப்பட்ட மிதிவண்டி தான். இதன் பிறகே, 1949ல் மோட்டார் மற்றும் பிரேம் பொருத்திய மாடல்-டி(டிரீம்) என்ற மோட்டார் சைக்கிளை தயாரித்தது.

கடந்த, 1963ல் ஹோண்டா, பிக்-அப் டிரக் டி360 என்ற முதல் நான்கு சக்கர வாகனத்தை தயாரித்தது. அதன்பின், அதே ஆண்டில், முதல் காரை அறிமுகப்படுத்தியது. அதாவது, எஸ்500 என்ற, ஸ்போர்ட்ஸ் கார், 1963ல் தயாரிக்கப்பட்டது. இதன் பிறகு பல நிலைகளில் வளர்ந்த ஹோண்டா நிறுவனம், உலகளவில் தன் தயாரிப்புகளை வழங்கியது. 1986ல் அமெரிக்காவில், அக்கூரா மாடல் காரை அறிமுகப்படுத்தியது. 1958லேயே மோட்டார் சி100 சூப்பர் கிளப்பை அறிமுகப்படுத்திய ஹோண்டா, அங்கு தொழிற்சாலையை பெரிய அளவில் நிறுவியுள்ளது.

ஹோண்டாவின் அதிவேக மோட்டார் சைக்கிள்கள்

மோட்டார் சைக்கிள் தயாரிப்பில், தனக்கென, தனி இடத்தை பிடித்துள்ள, ஹோண்டா நிறுவனம், பல புதிய மாடல்களை, ஆண்டுக்கு ஆண்டு அறிமுகப்படுத்தி வருகிறது. தற்போது மலைகளில் பயணிக்கக்கூடிய, சிறப்பு பைக்குகளை தயாரித்து வருகிறது. 1996ல், ஹோண்டா தயாரித்த, சிபிஆர், 1100எக்ஸ்எக்ஸ் சூப்பர் பிளாக் பேர்டு (1137சிசி) அதிவேக பைக்கில் மிக பிரபலமான மாடல்.

ஹோண்டா கார் தயாரிப்புகள்

கடந்த, 1963ல் அறிமுகப்படுத்தப்பட்ட, எஸ்500 காருக்கு பிறகு, ஹோண்டா பல வகை கார்களை அறிமுகப்படுத்தியுள்ளது. ஹோண்டாவின் பிட், சிவிக், அக்கார்ட், இன்சைட், சிஆர்-வி, சிஆர்-இசட் இன்கிலேண்ட் மற்றும் ஓபிசி போன்றவை மிகப் பிரபலமானவை.

இந்தியாவின் ஹோண்டா

இந்தியாவில் ஹோண்டா நுழைந்தது, 1995ல் தான். ஹோண்டா சில்ஸ் கார்ஸ் இந்தியா லிமிடெட் என்ற பெயரில், உஷா இன்டர்நேஷனல் நிறுவனத்துடன் இணைந்து, கார் உற்பத்தி, விற்பனை மற்றும் ஏற்றுமதியை மேற்கொண்டது. 2012 ஆகஸ்டில், ஹோண்டா நிறுவனம், தனித்து இயங்க ஆரம்பித்தது. அதன் பின், ஹோண்டா கார்ஸ் இந்தியா லிமிடெட் என, அழைக்கப்பட்டது.

இந்தியாவில், கிரேட்டர் நொய்டா- உத்தரப்பிரதேசம், தப்புகாரா - ராஜஸ்தான் போன்ற இடங்களில் பெரிய தொழிற்சாலைகள் உள்ளன. கிரேட்டர் நொய்டாவில், ஆண்டுக்கு, 1,00,000 யூனிட்களும், தப்புகாராவில் ஆண்டுக்கு 50,000 யூனிட்களும் தயாரிக்கும் வசதி உள்ளது. ஹோண்டா நிறுவனத்தின் இந்திய முதலீடு, 16.2 மில்லியன் என்ற அளவில் உள்ளது.

இந்தியாவின் ஹோண்டா மாடல் கார்கள்

இந்தியாவில், ஹோண்டா மாடல் கார்களாக, ஹோண்டா பிரிபோ, ஹோண்டா அமேஸ், ஹோண்டா சிட்டி, ஹோண்டா அக்கார்டு, ஹோண்டா சிஆர்-வி போன்றவை வருகின்றன. இதில், ஹோண்டா சிஆர்-வி தவிர மற்ற நான்கும் கிரேட்டர் நொய்டாவில் தயாரிக்கப்படுகின்றன. இதுதவிர, ஹோண்டா சிட்டி போன்றவையும், மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளன. விலை குறைந்தது முதல், விலை அதிகமானது ஹாட்ச்பேக், செடன், எஸ்யுவி, பிரீமியம் என்ற வகையில், தன் தயாரிப்புகளை வழங்கி வருகிறது ஹோண்டா.

ஹோண்டாவின் சாதனைகள்

ஹோண்டாவின் சிராக்ஸ் மாடல் கார், 2005ல், 16.5 மில்லியன் அளவுக்கு உற்பத்தி செய்யப்படுகிறது. இது உலகின் ஆறாவது சிறந்த விற்பனைக்காராக திகழ்ந்து உள்ளது. ஹோண்டாவின் அக்கார்டு கார், ஜப்பானைத் தவிர்த்து, சீனா, இந்தியா, மலேசியா, மெக்சிகோ, பாகிஸ்தான், தாய்லாந்து மற்றும் அமெரிக்காவிலும் தயாரிக்கப்படுகிறது.

Advertisement

மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)