பதிவு செய்த நாள்
13 ஜன2014
17:09
மும்பை : இந்த வருடம் துவங்கியதில் இருந்தே மந்தமாக இருந்து வந்த இந்திய பங்குசந்தைகள் இன்று ஒரேநாளில் எழுச்சி கண்டன. ரிசர்வ் வங்கி வெளியிட இருக்கும் பணக்கொள்கையில் வட்டி விகிதத்தில் மாற்றம் செய்யப்பட மாட்டாது என தவகல் வெளியாகியுள்ளதாலும், அதனால் சில்லரை வர்த்தக பணவீக்கம் குறையும் என்ற எதிர்பார்ப்பாலும் முதலீட்டாளர்கள் அதிகளவு பங்குகளை வாங்கினர். இதனால் இந்திய பங்குசந்தைகள் நல்ல ஏற்றம் கண்டன.
இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில் சென்செக்ஸ் 264 புள்ளிகள் ஏற்றத்துடன் துவங்கிய நிலையில், வர்த்தகநேர முடிவிலும் ஏற்றத்துடனேயே இருந்து சென்செக்ஸ் 375.72 புள்ளிகள் உயர்ந்து 21,134.21-ஆகவும், நிப்டி 101.30 புள்ளிகள் உயர்ந்து 6,272.75-ஆகவும் முடிந்தன.
இன்றைய வர்த்தகநேர முடிவில் சென்செக்ஸை அளவிட உதவும் 30 நிறுவன பங்குகளில் இன்போசிஸ், டிசிஎஸ்., ரிலையன்ஸ் உள்ளிட் 21 நிறுவன பங்குகள் விலை உயர்ந்தும், சன்பார்மா, டாடா பவர்ஸ் உள்ளிட்ட 9 நிறுவன பங்குகள் விலை சரிந்தும் முடிந்தன.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|