பதிவு செய்த நாள்
16 ஜன2014
17:20
மும்பை : வாரத்தின் நான்காம் நாளில் இந்திய பங்குசந்தைகள் சரிவுடன் முடிந்தன. நேற்று சென்செக்ஸ் 256 புள்ளிகள் ஏற்றம் பெற்ற நிலையில், உலகளவில் பங்குசந்தைகளில் காணப்படும் ஏற்ற - இறக்கம் மற்றும் லாபநோக்கோடு முதலீட்டாளர்கள் பங்குகளை விற்பனை செய்தது போன்ற காரணங்களால் இந்திய பங்குசந்தைகள் சரிவுடன் முடிந்தன.
இன்றைய வர்த்தநேர முடிவில் மும்பை பங்குசந்தையான சென்செக்ஸ் குறியீட்டு எண் 24.31 புள்ளிகள் சரிந்து 21,199.65-ஆகவும், தேசிய பங்குசந்தையான நிப்டி 2 புள்ளிகள் சரிந்து 6,318.90-ஆகவும் முடிந்தன.
சென்செக்ஸை அளவிட உதவும் 30 நிறுவன பங்குகளில் பார்தி ஏர்டெல், சிப்லா, டாக்டர் ரெட்டி, எச்டிஎப்சி., ஹீரோ மோட்டோ கார்ப், ஐடிசி., உள்ளிட்ட 16 நிறுவன பங்குகள் விலை சரிந்தும், கோல் இந்தியா, ஹிண்டால்கோ, உள்ளிட்ட 14 நிறுவன பங்குகள் விலை உயர்ந்தும் முடிந்தன.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|