பதிவு செய்த நாள்
30 ஜன2014
12:25
கும்மிடிப்பூண்டி: குறைவான லாரி வாடகை, ஓட்டுனர் படியை நிர்ணயித்ததால் அதிருப்தி அடைந்த லாரி உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுனர்கள், இரண்டாவது நாளாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால், வெளி மாவட்டங்களுக்கு, செல்ல வேண்டிய, 60 ஆயிரம் சமையல் காஸ் சிலிண்டர்கள் தேக்கம் அடைந்துள்ளன.
30 ஆயிரம் சிலிண்டர்கள்: திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி, சிப்காட் வளாகத்தில், பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தின், சமையல் காஸ் சிலிண்டரில், காஸ் நிரப்பும் நிலையம் உள்ளது. இங்கிருந்து, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், விழுப்புரம், புதுச்சேரி, காரைக்கால் மற்றும் ஆந்திர மாநிலத்தின், நெல்லூர், சித்தூர் மாவட்டங்களுக்கு, தினசரி, 100 லாரிகள் மூலம், 30 ஆயிரம் சிலிண்டர்கள் வினியோகம் செய்யப்படுகின்றன. மூன்று ஆண்டுகளுக்கு, ஒருமுறை லாரி வாடகை, ஏற்று, இறக்கு கூலி, ஓட்டுனர்படியை மாற்றி அமைப்பது தொடர்பாக, நிர்வாகம் மற்றும் லாரி உரிமையாளர்கள் இடையே, ஒப்பந்தம் செய்யப்படும். அதன்படி, 30 ஒப்பந்ததாரர்களின், 140 லாரிகள் இயக்கப்படுகின்றன. கடந்த டிசம்பருடன், ஒப்பந்தம் முடிந்த நிலையில், பாரத் பெட்ரோலியம் நிறுவனம் நிர்ணயித்த, புதிய வாடகை தொகை, ஏற்று, இறக்கு கூலி, ஓட்டுனர் படியை, லாரி உரிமையாளர்கள் ஏற்க மறுத்தனர்.
அதிருப்தி: கூடுதல் தொகை கேட் டனர்; இதை நிறுவனம் ஏற்க மறுத்ததால், அதிருப்தி அடைந்த லாரி உரிமை யாளர்கள் மற்றும் ஓட்டுனர்கள், கடந்த இரண்டு நாட்களாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். நேற்று நடந்த பேச்சு வார்த்தையில் சுமுக தீர்வு எற்படவில்லை. இதனால், வெளி இடங்க ளுக்கு செல்ல வேண்டிய, 60 ஆயிரம் சமையல் காஸ் சிலிண் டர்கள் தேக்கம் அடைந்துள்ளன.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|