பதிவு செய்த நாள்
03 பிப்2014
12:43
சேலம்: தமிழகத்தில் விளைச்சல் இல்லாததால், சீரக சம்பா அரிசிக்கு, தட்டுப்பாடு ஏற்பட்டு, குவிண்டாலுக்கு, 500 ரூபாய் வரை விலை உயர்ந்துள்ளது.
தமிழகத்தில், சைவ, அசைவ பிரியாணி தயாரிப்பில், சீரக சம்பா ரக அரிசி, அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது. இந்த ரக அரிசி, தமிழகத்தில், துறையூர், தொப்பம்பட்டி, பி.மேட்டூர், வைரசெட்டிபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் விளைகிறது. தமிழகம், மேற்கு வங்காளத்தில் இருந்து, அதிக அளவில், அரபு நாடுகளுக்கு பிரியாணி தயாரிக்க, சீரக சம்பா அரிசி ஏற்றுமதி செய்யப்படுகிறது. கடந்த ஆண்டு, எதிர்பார்த்த மழை இல்லாததால், தமிழகத்தில், சீரக சம்பா விளைச்சல் எதிர்பார்த்த அளவு இல்லை. குறைந்த அளவில் விளைந்த நெல்லையும், வெளிமாநில வியாபாரிகள், அதிக விலை கொடுத்து வாங்கிச் சென்று விட்டனர்.
தற்போது, தமிழகத்தில், சீரக சம்பா நெல், அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மேற்கு வங்காளத்தில் இருந்து, தமிழகத்துக்கு, சீரக சம்பா ரக அரிசி விற்பனைக்கு வந்து கொண்டு இருந்தது. இங்கு, விளைச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால், வியாபாரிகள், அதிக லாபம் பெறும் நோக்கில், மேற்கு வங்காள, சீரக சம்பா அரிசியை, அதிக அளவில் வாங்கி, பதுக்கி வருகின்றனர். இதனால், மார்க்கெட்டுக்கு விற்பனைக்கு வரும், சீரக சம்பா ரக அரிசி வரத்திலும், தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக, விலை, குவிண்டாலுக்கு, 500 ரூபாய் வரை உயர்வு ஏற்பட்டுள்ளது. மொத்த விலையில், கடந்த வாரம், முதல் ரக சீரக சம்பா அரிசி, குவிண்டால், 7,400 ரூபாய்க்கு விற்றது, 7,900 ரூபாயாகவும், இரண்டாம் ரகம், 6,500 ரூபாய்க்கு விற்றது, 6,900 ரூபாயாகவும் உயர்ந்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|