ரூபாயின் மதிப்பில் சரிவு - ரூ.62.57ரூபாயின் மதிப்பில் சரிவு - ரூ.62.57 ... பால் உற்பத்தியாளர்கள் போராட்டத்தால் ஆவினுக்கு பாதிப்பு இல்லையாம் பால் உற்பத்தியாளர்கள் போராட்டத்தால் ஆவினுக்கு பாதிப்பு இல்லையாம் ...
'மைக்ரோசாப்ட்' நிறுவனத்தின் புதிய சி.இ.ஓ., சத்யா நடெல்லா!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

05 பிப்
2014
11:28

வாஷிங்டன்: கம்ப்யூட்டர் உலகின் முன்னணி நிறுவனமான 'மைக்ரோசாப்ட்' நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக (சி.இ.ஓ., ), இருந்த ஸ்டீவ் பால்மர் ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து, புதிய சி.இ.ஓ., வாக இந்திய வம்சாவளியை சேர்ந்த சத்யா நடெல்லா, நேற்று நியமனம் செய்யப்பட்டார்.

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் "விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டம்' தான் பெரும்பாலும் உலகளவில் கம்ப்யூட்டரில் பயன்படுத்தப்படுகிறது. சத்யா நடெல்லா, 1969ம் ஆண்டு ஐதராபாத்தில் பிறந்தார். பள்ளிப்படிப்பை ஐதராபாத் பப்ளிக் பள்ளியில் முடித்தார். பின், மணிப்பால் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி கல்லூரியில் பி.இ., (இ.சி.இ.,) பட்டம் பெற்றார். அதன்பின் அமெரிக்காவில் உள்ள விஸ்கான்சின் பல்கலைக்கழகத்தில் எம்.எஸ்., ( கம்ப்யூட்டர் சயின்ஸ்) படிப்பை நிறைவு செய்தார். சன் மைக்ரோ சிஸ்டம் என்ற நிறுவனத்தில் தனது பணியை துவக்கினார். பின் சிகாகோ பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ., படிப்பை முடிக்கும் போது, 1992ல் மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் "புரோகிராம் மேனேஜர்' ஆக பொறுப்பேற்றார். இவர் தனது திறமையால் நிறுவனத்தில் மிக விரைவாக உயர்ந்தார். ஆன்லைன் சர்வீஸ் துறையில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பிரிவில் சீனியர் துணை தலைவராக பதவி உயர்வு பெற்றார். தற்போது சி.இ.ஓ., வாக பொறுப்பேற்றுள்ளார். இவருக்கு திருமணமாகி, 3 குழந்தைகள் உள்ளனர்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)