பதிவு செய்த நாள்
05 பிப்2014
11:28
வாஷிங்டன்: கம்ப்யூட்டர் உலகின் முன்னணி நிறுவனமான 'மைக்ரோசாப்ட்' நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக (சி.இ.ஓ., ), இருந்த ஸ்டீவ் பால்மர் ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து, புதிய சி.இ.ஓ., வாக இந்திய வம்சாவளியை சேர்ந்த சத்யா நடெல்லா, நேற்று நியமனம் செய்யப்பட்டார்.
மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் "விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டம்' தான் பெரும்பாலும் உலகளவில் கம்ப்யூட்டரில் பயன்படுத்தப்படுகிறது. சத்யா நடெல்லா, 1969ம் ஆண்டு ஐதராபாத்தில் பிறந்தார். பள்ளிப்படிப்பை ஐதராபாத் பப்ளிக் பள்ளியில் முடித்தார். பின், மணிப்பால் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி கல்லூரியில் பி.இ., (இ.சி.இ.,) பட்டம் பெற்றார். அதன்பின் அமெரிக்காவில் உள்ள விஸ்கான்சின் பல்கலைக்கழகத்தில் எம்.எஸ்., ( கம்ப்யூட்டர் சயின்ஸ்) படிப்பை நிறைவு செய்தார். சன் மைக்ரோ சிஸ்டம் என்ற நிறுவனத்தில் தனது பணியை துவக்கினார். பின் சிகாகோ பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ., படிப்பை முடிக்கும் போது, 1992ல் மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் "புரோகிராம் மேனேஜர்' ஆக பொறுப்பேற்றார். இவர் தனது திறமையால் நிறுவனத்தில் மிக விரைவாக உயர்ந்தார். ஆன்லைன் சர்வீஸ் துறையில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பிரிவில் சீனியர் துணை தலைவராக பதவி உயர்வு பெற்றார். தற்போது சி.இ.ஓ., வாக பொறுப்பேற்றுள்ளார். இவருக்கு திருமணமாகி, 3 குழந்தைகள் உள்ளனர்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|