பதிவு செய்த நாள்
06 பிப்2014
10:56
புதுடில்லி: ""இந்தியாவால், பெட்ரோலியப் பொருட்களுக்கு தொடர்ந்து மானியம் வழங்க முடியாது என்பதால், அத்தகைய நடைமுறைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது,'' என, பொருளாதார விவகாரங்கள் துறை செயலர், அரவிந்த் மாயாராம் தெரிவித்தார். எந்த நாடும், எதற்கும் தொடர்ந்து மானியம் அளித்துக் கொண்டிருக்க முடியாது. மானியங்களை நம்பித்தான் வர்த்தகம் இருக்குமென்றால், அந்த வர்த்தகம் தோல்வியில் தான் முடிவடையும் என, அவர் மேலும் கூறினார்.
அண்மையில், மத்திய அரசு, வீடுகளுக்கான, மானிய விலை சமையல் எரிவாயு உருளையை, ஆண்டிற்கு, ஒன்பது என்ற எண்ணிக்கையில் இருந்து, 12 ஆக உயர்த்தியது. இதனால், மத்திய அரசின் மானிய சுமையில், 5,000 கோடி ரூபாய் அதிகரிக்கும். இந்நிலையில், அரவிந்த் மயாராம், அரசுக்கு எதிராக கருத்து தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|