தங்கம் விலை ரூ.40 அதிகரிப்புதங்கம் விலை ரூ.40 அதிகரிப்பு ... தங்கம் விலையில் மாற்றமில்லை தங்கம் விலையில் மாற்றமில்லை ...
பொருளாதார வளர்ச்சிநன்கு உள்ளது: சிதம்பரம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

07 மார்
2014
23:46

புதுடில்லி:நாட்டின் பொருளாதார வளர்ச்சி,கடந்த 18 மாதங்களுக்கு முன் இருந்ததை விட,தற்போது,நன்கு உள்ளது. நிதி மற்றும் நடப்பு கணக்கு பற்றாக் குறை கட்டுப்படுத்தப்பட்டுள்ளது,என, மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்தார். ரிசர்வ் வங்கியின் இயக்குனர் குழுகூட்டம், டில்லியில் நடைபெற்றது. கூட்டத்திற்கு பின், சிதம்பரம் கூறியதாவது:நாட்டின் பொருளாதார வளர்ச்சி, கடந்த ஒன்றரை வருடங்களுக்கு முன்பு இருந்ததை விட, தற்போது சிறப்பாக உள்ளது. நிதி பற்றாக்குறை, நிர்ணயிக்கப்பட்ட இலக்கு அளவிற்குகட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
மத்திய அரசு மற்றும் ரிசர்வ் வங்கியின் நடவடிக்கைகளால், நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜி.டீ.பி.,), நடப்பு கணக்கு பற்றாக்குறை, 4,000 கோடி டாலருக்கும் கீழ் குறைந்துள்ளது.நடப்பு கணக்கு பற்றாக் குறை குறித்த இறுதி புள்ளிவிவரம் கிடைத்தவுடன், தங்கம் இறக்குமதி மீதான கட்டுப்பாடுகளை தளர்த்துவது குறித்து முடிவெடுக்கப்படும்.அரசு மற்றும் ரிசர்வ் வங்கியின் நடவடிக்கைகளால்,டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு வலுவடைந்து உள்ளது.
இதையடுத்து,அன்னிய நேரடி முதலீடும்,அன்னிய நிதி நிறுவனங்கள், பங்குச் சந்தைகளில் மேற்கொள்ளும் முதலீடும் அதிகரித்துள்ளது.இவ்வாறு, சிதம்பரம் தெரிவித்தார்.கடந்த 2012–13ம் நிதியாண்டில், நாட்டின் நடப்பு கணக்கு பற்றாக்குறை, மொத்த உள்நாட்டு உற்பத்தியில், 4.8 சதவீதம் அல்லது 8,800 கோடி டாலராக மிகவும் அதிகரித்திருந்தது. இதை கட்டுப்படுத்தும் வகையில்,மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும், தங்கம் இறக்குமதி மீது பல்வேறு கட்டுப்பாடுகளை அமல்படுத்தியது.இதற்கு, நல்ல பலனும் கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)