பதிவு செய்த நாள்
07 மார்2014
23:46
புதுடில்லி:நாட்டின் பொருளாதார வளர்ச்சி,கடந்த 18 மாதங்களுக்கு முன் இருந்ததை விட,தற்போது,நன்கு உள்ளது. நிதி மற்றும் நடப்பு கணக்கு பற்றாக் குறை கட்டுப்படுத்தப்பட்டுள்ளது,என, மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்தார். ரிசர்வ் வங்கியின் இயக்குனர் குழுகூட்டம், டில்லியில் நடைபெற்றது. கூட்டத்திற்கு பின், சிதம்பரம் கூறியதாவது:நாட்டின் பொருளாதார வளர்ச்சி, கடந்த ஒன்றரை வருடங்களுக்கு முன்பு இருந்ததை விட, தற்போது சிறப்பாக உள்ளது. நிதி பற்றாக்குறை, நிர்ணயிக்கப்பட்ட இலக்கு அளவிற்குகட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
மத்திய அரசு மற்றும் ரிசர்வ் வங்கியின் நடவடிக்கைகளால், நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜி.டீ.பி.,), நடப்பு கணக்கு பற்றாக்குறை, 4,000 கோடி டாலருக்கும் கீழ் குறைந்துள்ளது.நடப்பு கணக்கு பற்றாக் குறை குறித்த இறுதி புள்ளிவிவரம் கிடைத்தவுடன், தங்கம் இறக்குமதி மீதான கட்டுப்பாடுகளை தளர்த்துவது குறித்து முடிவெடுக்கப்படும்.அரசு மற்றும் ரிசர்வ் வங்கியின் நடவடிக்கைகளால்,டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு வலுவடைந்து உள்ளது.
இதையடுத்து,அன்னிய நேரடி முதலீடும்,அன்னிய நிதி நிறுவனங்கள், பங்குச் சந்தைகளில் மேற்கொள்ளும் முதலீடும் அதிகரித்துள்ளது.இவ்வாறு, சிதம்பரம் தெரிவித்தார்.கடந்த 2012–13ம் நிதியாண்டில், நாட்டின் நடப்பு கணக்கு பற்றாக்குறை, மொத்த உள்நாட்டு உற்பத்தியில், 4.8 சதவீதம் அல்லது 8,800 கோடி டாலராக மிகவும் அதிகரித்திருந்தது. இதை கட்டுப்படுத்தும் வகையில்,மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும், தங்கம் இறக்குமதி மீது பல்வேறு கட்டுப்பாடுகளை அமல்படுத்தியது.இதற்கு, நல்ல பலனும் கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|