பதிவு செய்த நாள்
19 மார்2014
17:27
மும்பை : இந்திய பங்குசந்தைகள் இன்று(மார்ச் 19ம் தேதி) மந்தமாகவே முடிந்தன. காலை வர்த்தகநேர துவக்கத்தில் ஏற்றத்துடன் துவங்கின இந்திய பங்குசந்தைகள், ஆனால் ஐ.டி. தொடர்பான பங்குகள் விலை சரிவை சந்தித்தாலும், வெளிவர இருக்கும் அமெரிக்க பெடரல் வங்கியின் பணவெளியீட்டு கொள்கை மீதான எதிர்பார்ப்பாலும் இந்திய பங்குசந்தைகளில் இன்று வர்த்தகம் பெரிய அளவில் நடைபெறவில்லை.
வர்த்தகநேர முடிவில் மும்பை பங்குசந்தையான சென்செக்ஸ் குறியீட்டு எண் 0.25 புள்ளிகள் உயர்ந்து 21,832.86-ஆகவும், தேசிய பங்குசந்தையான நிப்டி 7.40 புள்ளிகள் உயர்ந்து 6,524.05-ஆகவும் முடிந்தன.
இன்றைய வர்த்தகத்தில் இன்போசிஸ், டெக் மஹிந்திரா, எச்சிஎல்., உள்ளிட்ட ஐ.டி. நிறுவன பங்குகளும், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், ஐடிசி., எஸ்பிஐ., ஆக்சிஸ், ஐசிஐசிஐ., எச்டிஎப்சி, எல்அண்ட்டி, பெல், டாடா ஸ்டீல் உள்ளிட்ட அநேக நிறுவன பங்குகள் விலை சரிவை சந்தித்தன.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|