வர்த்தகம் » பொது
ரூபாயின் மதிப்பில் உயர்வு - ரூ.60க்கு கீழ் சென்றது
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
28 மார்2014
10:10

மும்பை : கடந்த எட்டு மாதங்களுக்கு பிறகு முதன்முறையாக ரூபாயின் மதிப்பு அதிகளவு உயர்ந்து, ரூ.60-க்கு கீழ் சென்று ரூ.59.91-ஆக முடிந்தது. இன்றைய(மார்ச் 28ம் தேதி, வெள்ளிக்கிழமை) வர்த்தகநேர துவக்கத்தின் போது (காலை 9.15 மணி) அந்நிய செலாவணி சந்தையில், அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு, 18 காசுகள் உயர்ந்து 60.12-ஆக இருந்தது. தொடர்ந்து உயர்வுடனேயே இருந்த ரூபாயின் மதிப்பு இறுதியில் வர்த்தகநேர முடிவில் 66 காசுகள் உயர்ந்து ரூ.59.91-ஆக முடிந்தது. கடந்த எட்டு மாதங்களுக்கு பிறகு இன்று தான் ரூபாயின் மதிப்பு இந்தளவுக்கு உயர்ந்துள்ளது.
உள்நாட்டு பங்குசந்தையில் காணப்பட்ட ஏற்றம், ஏற்றுமதியாளர்கள், வங்கிககள் அதிகளவு அமெரிக்க டாலரை விற்பனை செய்தது போன்ற காரணங்களால் இந்திய ரூபாயின் மதிப்பில் உயர்வு காணப்படுவதாக சந்தை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். முன்னதாக நேற்று ரூபாயின் மதிப்பு ரூ.60.31-ஆக இருந்தது.
Advertisement
மேலும் பொது செய்திகள்

புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு மார்ச் 28,2014
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்

அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் மார்ச் 28,2014
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்

பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது மார்ச் 28,2014
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்

ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி மார்ச் 28,2014
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்

புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!