பதிவு செய்த நாள்
10 ஏப்2014
17:27
மும்பை : இந்திய பங்குசந்தைகள் சிறிய ஏற்றத்துடன் முடிந்தாலும் மீண்டும் ஒரு புதிய உச்சத்தை தொட்டன. நடப்பாண்டில் இந்தியாவின் வளர்ச்சி 5.4 சதவீதமாக உயரும் என ஐ.எம்.எப்., தெரிவித்ததன் எதிரொலியாக நேற்று முதலே பங்குசந்தைகள் உயர்வுடன் உள்ளன. குறிப்பாக தேசிய பங்குசந்தையான நிப்டி 6800 புள்ளிகளை தொட்டு சாதனை படைத்தது.
இன்றும் பங்குசந்தைகள் ஏற்றத்துடன் ஆரம்பமானது. ஆனால் லாபநோக்கோடு முதலீட்டாளர்கள் பங்குகளை விற்பனை செய்ததால் பங்குசந்தைகள் சரிந்தன. இருப்பினும் ஐரோப்பா மற்றும் ஆசிய பங்குசந்தைகள் உயர்ந்தது, அந்நிய முதலீடுகள் அதிகரித்தது போன்ற காரணங்களால் பங்குசந்தைகள் இறுதியில் சிறிய ஏற்றத்துடன் முடிந்தன. அதேசமயம் மீண்டும் ஒரு உச்சத்தை தொட்டன.
இன்றைய வர்த்தகநேர முடிவில் மும்பை பங்குசந்தையான சென்செக்ஸ் குறியீட்டு எண் 13 புள்ளிகள் உயர்ந்து 22,715.33-ஆகவும், தேசிய பங்குசந்தையான நிப்டி 0.20 புள்ளிகள் உயர்ந்து 6,796.40 புள்ளிகளாகவும் முடிந்தன. முன்னதாக வர்த்தகநேரத்தின் போது சென்செக்ஸ் அதிகபட்சமாக 22,792.49 புள்ளிகள் வரையும், நிப்டி அதிகபட்சமாக 6,819.05 புள்ளிகள் வரையும் வர்த்தகமானது.
சென்செக்ஸை அளவிட உதவும் 30 நிறுவன பங்குகளில் 16 நிறுவன பங்குகள் விலை உயர்ந்தும், 14 நிறுவன பங்குகள் விலை சரிந்தும் முடிந்தன. குறிப்பாக ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், எஸ்பிஐ., ஆக்சிஸ், டாடா பவர், எச்டிஎப்சி., நிறுவன பங்குகள் நல்ல லாபம் கண்டன.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|