தங்கம் விலை ரூ.120 உயர்வுதங்கம் விலை ரூ.120 உயர்வு ... இந்திய ரூபாய் மதிப்பில் சரிவு: ரூ.60.17 இந்திய ரூபாய் மதிப்பில் சரிவு: ரூ.60.17 ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
ஏற்றத்தில் முடிந்தன இந்திய பங்குசந்தைகள்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

10 ஏப்
2014
17:27

மும்பை : இந்திய பங்குசந்தைகள் சிறிய ஏற்றத்துடன் முடிந்தாலும் மீண்டும் ஒரு புதிய உச்சத்தை தொட்டன. நடப்பாண்டில் இந்தியாவின் வளர்ச்சி 5.4 சதவீதமாக உயரும் என ஐ.எம்.எப்., தெரிவித்ததன் எதிரொலியாக நேற்று முதலே பங்குசந்தைகள் உயர்வுடன் உள்ளன. குறிப்பாக தேசிய பங்குசந்தையான நிப்டி 6800 புள்ளிகளை தொட்டு சாதனை படைத்தது.
இன்றும் பங்குசந்தைகள் ஏற்றத்துடன் ஆரம்பமானது. ஆனால் லாபநோக்கோடு முதலீட்டாளர்கள் பங்குகளை விற்பனை செய்ததால் பங்குசந்தைகள் சரிந்தன. இருப்பினும் ஐரோப்பா மற்றும் ஆசிய பங்குசந்தைகள் உயர்ந்தது, அந்நிய முதலீடுகள் அதிகரித்தது போன்ற காரணங்களால் பங்குசந்தைகள் இறுதியில் சிறிய ஏற்றத்துடன் முடிந்தன. அதேசமயம் மீண்டும் ஒரு உச்சத்தை தொட்டன.
இன்றைய வர்த்தகநேர முடிவில் மும்பை பங்குசந்தையான சென்செக்ஸ் குறியீட்டு எண் 13 புள்ளிகள் உயர்ந்து 22,715.33-ஆகவும், தேசிய பங்குசந்தையான நிப்டி 0.20 புள்ளிகள் உயர்ந்து 6,796.40 புள்ளிகளாகவும் முடிந்தன. முன்னதாக வர்த்தகநேரத்தின் போது சென்செக்ஸ் அதிகபட்சமாக 22,792.49 புள்ளிகள் வரையும், நிப்டி அதிகபட்சமாக 6,819.05 புள்ளிகள் வரையும் வர்த்தகமானது.
சென்செக்ஸை அளவிட உதவும் 30 நிறுவன பங்குகளில் 16 நிறுவன பங்குகள் விலை உயர்ந்தும், 14 நிறுவன பங்குகள் விலை சரிந்தும் முடிந்தன. குறிப்பாக ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், எஸ்பிஐ., ஆக்சிஸ், டாடா பவர், எச்டிஎப்சி., நிறுவன பங்குகள் நல்ல லாபம் கண்டன.

Advertisement

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)