பதிவு செய்த நாள்
16 ஏப்2014
10:17
மும்பை : கடந்த 2 நாட்களாக சரிவுடன் காணப்பட்ட இந்திய பங்குச் சந்தைகள் இன்று ( ஏப்ரல் 16, காலை 9 மணி நிலவரம்) சரிவில் இருந்து மீண்டுள்ளன. வாரத்தின் 3வது நாளான இன்று, இந்திய பங்குச் சந்தைகள் 28 புள்ளிகள் உயர்வுடன் துவங்கி உள்ளன. மும்பை பங்குச் சந்தையான சென்செக்ஸ் 28.31 புள்ளிகள் உயர்ந்து 22,513.24 புள்ளிகளாகவும், தேசிய பங்குச் சந்தையான நிப்டி 4 புள்ளிகள் அதிகரித்து 6737.10 புள்ளிகளாகவும் உள்ளன.
இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்திருந்த போதும் பங்குச் சந்தைகள் உயர்வுடனேயே காணப்படுகின்றன. ஹாங்காங், ஜப்பான் உள்ளிட்ட ஆசிய பங்குச் சந்தைகளும் ஏற்றத்துடனேயே காணப்படுகின்றன. எண்ணெய் மற்றும் எரிவாயு, உலோகம், ஆயுள் காப்பீடு உள்ளிட்ட நிறுவனப் பங்குகளின் உயர்வின் காரணமாக சந்தைகளில் உயர்வு காணப்படுகிறது. அமெரிக்க பங்குச் சந்தைகளும் உயர்வுடனேயே முடிவடைந்துள்ளன.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|