பதிவு செய்த நாள்
25 ஏப்2014
16:50
மும்பை : கடந்த சில நாட்களாக உயர்வுடன், அதுவும் வரலாறு காணாத அளவுக்கு உச்சத்தை தொட்டு இருந்த இந்திய பங்குசந்தைகள், வாரத்தின் கடைசிநாளான இன்று(ஏப்ரல் 25ம் தேதி) சரிவுடன் துவங்கி, சரிவுடனேயே முடிந்தன.
முதலீட்டாளர்கள் லாபநோக்கோடு பங்குகளை விற்பனை செய்ததால் முக்கிய நிறுவனங்களின் பங்குகள் விலை சரிந்தன. இதனால் பங்குசந்தைகள் நாள் முழுக்க சரிவில் முடிந்தன. இன்றைய வர்த்தகநேர முடிவில், மும்பை பங்குசந்தையான சென்செக்ஸ் குறியீட்டு எண் 188.47 புள்ளிகள் சரிந்து 22,688.07 புள்ளிகளிலும், தேசிய பங்குசந்தையான நிப்டி 58.05 புள்ளிகள் சரிந்து 6,782.75 புள்ளிகளிலும் முடிந்தன.
சென்செக்ஸை அளவிட உதவும் 30 நிறுவன பங்குகளில் 21 நிறுவன பங்குகள் விலை சரிந்தும், 9 நிறுவன பங்குகள் விலை உயர்ந்தும் முடிந்தன. குறிப்பாக எண்ணெய் மற்றும் எரிவாயு தொடர்பான பங்குகள் விலை பெரும் சரிவை சந்தித்தன. இவைகள் தவிர்த்து மாருதி சுசூகி, ஐசிஐசிஐ., ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், எல்அண்ட்டி., உள்ளிட்ட நிறுவன பங்குகளும் சரிவை சந்தித்தன.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|