பதிவு செய்த நாள்
28 ஏப்2014
10:27
மும்பை: வழக்கமான மழை அளவை விட இந்த ஆண்டு குறைவாக இருக்கும் என்ற நிலை நிலவுவதால் வறட்சி பயம் காணமாக நிதித்துறையாளர்களும் மற்றும் சில்லரை முதலீட்டாளர்களும் லாபம் தரும் பங்குகளுக்கு முன்பதிவு செய்ததால் வாரத்தின் முதல் நாளான இன்று( ஏப்ரல் 28) வர்த்தக நேர துவக்கத்தின் போது (காலை 9 மணி நிலவரம்) இந்திய பங்குச் சந்தைகள் சரிவுடன் காணப்பட்டன. சென்செக்ஸ் 27.44 புள்ளிகள் சரிந்து 22,660.63 புள்ளிகளாகவும், நிப்டி 15.35 புள்ளிகள் சரிந்து 6767.40 புள்ளிகளாகவும் இருந்தன.
ஆட்டோத்துறை, வங்கிகள், மின்உற்பத்தித் துறை, எஃப்.எம்.சி.ஜி., உள்ளிட்ட முக்கிய துறைகளின் பங்குகள் பெரிய அளவில் சரிவை சந்தித்துள்ளன. மற்ற ஆசிய நாடுகளின் பங்குச் சந்தைகளும் சரிவுடனேயே துவங்கி உள்ளன. சர்வதேச அளவில் அமெரிக்க டாலருக்கு எதிரான ஆசிய நாடுகளின் நாணயங்கள் சரிவுடன் காணப்படுவதாலும், உக்ரைனில் நிலவும் பதற்றமான சூழ்நிலை காரணமாகவும் ஜப்பான், ஹாங்காங் பங்குச் சந்தைகள் சரிவுடனேயே காணப்படுகின்றன.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|