தங்கம் விலை ரூ.32 உயர்வுதங்கம் விலை ரூ.32 உயர்வு ... டால­ருக்கு நிக­ரானரூபாய் மதிப்பு குறைந்தது டால­ருக்கு நிக­ரானரூபாய் மதிப்பு குறைந்தது ...
'நடப்பு கணக்கு பற்றாக்குறை 2 சதவீதமாக குறையும்':தங்க முதலீட்டில் ஆர்வமில்லை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

06 மே
2014
06:09

ஐதராபாத்:''இனி வரும் ஆண்டுகளில், நடப்பு கணக்கு பற்றாக்குறை, 2 சதவீதம் என்ற அளவில் தான் இருக்கும்,'' என, பிரதமரின் பொருளாதார ஆலோசனை குழு தலைவர் சி.ரங்கராஜன் தெரிவித்தார்.

ஐதராபாத்தில், பொருளாதாரம் மற்றும் சமூக பயிலகம் ஏற்பாடு செய்திருந்த கூட்டத்திற்கு பிறகு, அவர், செய்தியாளர்களிடம் கூறியதாவது:கட்டுப்பாடுகள்தற்போது தங்கத்தில் முதலீடு செய்வதில் ஆர்வம் குறைந்து வருகிறது. மத்திய அரசு மற்றும் ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாடுகளால், தங்கம் இறக்குமதியும் வெகுவாக குறைந்துள்ளது.அதே போன்று, நாட்டின் பணவீக்கமும் கட்டுக்குள் உள்ளது. இது போன்ற காரணங்களால், அடுத்த ஒரு சில ஆண்டுகளில், நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில், நடப்பு கணக்கு பற்றாக்குறை, 2 சதவீதம் என்ற அளவில் மிகவும் குறைந்திருக்கும். மக்களிடம் தங்கத்தின் மீதான ஆர்வம் குறைந்துள்ளது. 

சர்வதேச அளவில் இதன் விலை குறைந்து வருவதுடன், இறக்குமதியும் மிகவும் குறைந்துள்ளது.எனவே, மத்திய அரசு, தங்கத்தின் மீதான கட்டுப்பாடுகளை படிப்படியாக விலக்கி கொள்ளலாம்.பருவ நிலை மாற்றத்தால் நடப்பாண்டில், பருவ மழை குறையும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இதனால், வேளாண் விளை பொருட்கள் உற்பத்தி குறையும் என, எதிர்பார்க்கப்படுகிறது. பணவீக்கம்:இதன் காரணமாக, பணவீக்கம் மீண்டும் அதிகரிக்கும் என, பரவலாக பேசப்படுகிறது. ஆனால், இந்த மதிப்பீடு மாறவும் வாய்ப்புள்ளது. எனவே, இது குறித்து அச்சப்பட தேவையில்லை.இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதற்கிடையே, அண்மையில் மத்திய நிதி அமைச்சர், ப.சிதம்பரம் கூறியதாவது:கடந்த 2012-13ம் நிதியாண்டில், நாட்டின் நடப்பு கணக்கு பற்றாக்குறை, மொத்த உள்நாட்டு உற்பத்தியில், 8,800 கோடி டாலர் அல்லது 4.7 சதவீதமாக மிகவும் அதிகரித்து காணப்பட்டது.
நிதி பற்றாக்குறை:இது, சென்ற 2013-14ம் நிதிஆண்டில், 3,200 கோடி டாலர் அல்லது 1.7 சதவீதமாக குறைந்து உள்ளது.மேலும், நாட்டின் நிதி பற்றாக்குறையும் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.எனவே, நாட்டின் பொருளாதார வளர்ச்சி வரும் இனி வரும் ஆண்டுகளில் நன்கு இருக்கும்.இவ்வாறு அவர் தெரிவித்து இருந்தார். 

நடப்பு கணக்கு பற்றாக்குறை என்பது, அன்னியச் செலாவணி வரத்திற்கும், வெளியேற்றத்திற்கும் உள்ள இடைவெளிஆகும்.கடந்த 2013-14ம் நிதிஆண்டில், நாட்டின் தங்கம் மற்றும் வெள்ளி இறக்குமதி, மதிப்பின் அடிப்படையில், அதற்கு முந்தைய ஆண்டை விட, 40 சதவீதம் குறைந்து, 3,346 கோடி டாலராக சரிவுஅடைந்தது. இது, நாட்டின் மொத்த இறக்குமதி செலவினத்தில், 7 சதவீதமாகும்.இது, முந்தைய நிதியாண்டில், 11 சதவீதம் என்ற அளவில் மிகவும் அதிகரித்து காணப்பட்டது. இறக்குமதி குறைந்துள்ள அதேநேரத்தில், ஏற்றுமதி அதிகரித்து வருகிறது.இது போன்ற காரணங்களால், இனி வரும் ஆண்டுகளில், நாட்டின் நடப்பு கணக்கு பற்றாக்குறை, குறிப்பிடத்தக்க அளவிற்கு குறையும் என, ரங்கராஜன் மேலும் தெரிவித்தார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)