பதிவு செய்த நாள்
07 மே2014
00:13
புதுடில்லி:நடப்பாண்டின் ஜனவரி முதல் மார்ச் வரையிலான முதல் காலாண்டில், இந்திய நிறுவனங்களின் இணைத்தல் மற்றும் கையகப்படுத்தல் நடவடிக்கைகளின் மதிப்பு, 24,420 கோடி ரூபாயாக சரிவடைந்து உள்ளது.
மதிப்பு:இது, கடந்தாண்டின் இதே காலாண்டில்,31,800 கோடி ரூபாயாக அதிகரித்து காணப்பட்டது. ஆக, மதிப்பீட்டு காலாண்டில், இணைத்தல் மற்றும் கையகப்படுத்தல் நடவடிக்கைகளின் மதிப்பு, 23 சதவீதம் சரிவடைந்துள்ளது என, கிரான்ட் தோர்ன்டன் ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.
கணக்கீட்டு காலாண்டில், இந்திய நிறுவனங்களின் இணைத்தல் நடவடிக்கை, அளவின் அடிப்படையிலும், 131 என்ற எண்ணிக்கையிலிருந்து, 128 ஆக குறைந்துள்ளது.மதிப்பீட்டு காலாண்டில், எரிசக்தி மற்றும் இயற்கை வளம் சார்ந்த துறைகளைச் சார்ந்த நிறுவனங்களின் இணைத்தல் நடவடிக்கைகளின் மதிப்பு, அதிகபட்சமாக, 4,788 கோடி ரூபாயாக உள்ளது. இது, ஒட்டு மொத்த இணைத்தல் மதிப்பில், 20 சதவீதம் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், அதிகபட்சமாக, 25 ஒப்பந்தங்கள் தகவல் தொழில்நுட்பம் மற்றும் அது சார்ந்த துறைகளில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.சூடுபிடிக்கும்:சர்வதேச நிலவரங்கள் மற்றும் பார்லிமென்ட் தேர்தல் காரணமாக, இந்திய நிறுவனங்களின் இணைத்தல் நடவடிக்கையில் தொய்வு ஏற்பட்டுஉள்ளது.மத்தியில் நிலையான புதிய அரசு பொறுப்பேற்கும் நிலையில், கையகப்படுத்தல் நடவடிக்கை சூடுபிடிக்கும் என, கிரான்ட் தோர்ன்டன் மேலும் தெரிவித்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|