பதிவு செய்த நாள்
07 மே2014
16:53
மும்பை : கடந்த இருதினங்கள் ஏற்றத்தில் இருந்த இந்திய பங்குசந்தைகள், வாரத்தின் மூன்றாம் நாளில் சரிவுடன் முடிந்தன. சரிவுடன் ஆரம்பித்த இந்திய பங்குசந்தைகள் வங்கி மற்றும் ஐ.டி., தொடர்பான பங்குகள் விலை சரிந்ததால் நாள் முழுக்க சரிவிலேயே முடிந்தன. இன்றைய வர்த்தகநேர முடிவில் மும்பை பங்குசந்தையான சென்செக்ஸ் குறியீட்டு எண் 184.52 புள்ளிகள் சரிந்து 22,323.90-ஆகவும், தேசிய பங்குசந்தையான நிப்டி 62.75 புள்ளிகள் சரிந்து 6,652.55-ஆகவும் முடிந்தன.
சென்செக்ஸை அளவிட உதவும் 30 நிறுவன பங்குகளில் 25 நிறுவன பங்குகள் விலை சரிவில் முடிந்தன. குறிப்பாக இன்போசிஸ் - 3.15 சதவீதமும், டிசிஎஸ். - 1.48 சதவீதமும், விப்ரோ - 1.77 சதவீதமும் சரிந்தன. இவை தவிர்த்து வங்கி தொடர்பான பங்குகள் விலையும் சரிந்தன. மேலும் பஜாஜ் ஆட்டோ, மாருதி சுசூகி போன்ற நிறுவன பங்குகள் விலையும் சரிந்தன.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|