பதிவு செய்த நாள்
20 மே2014
10:09
மும்பை : இந்திய பங்குசந்தைகள் தொடர்ந்து நான்காவது நாளாக ஏற்றத்துடன் காணப்படுகின்றன. இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில் (மே 20ம் தேதி, காலை 9.15 மணி) மும்பை பங்குசந்தையான சென்செக்ஸ் குறியீட்டு எண் 224.11 புள்ளிகள் உயர்ந்து 24,587.16-ஆகவும், தேசிய பங்குசந்தையான நிப்டி 90.10 புள்ளிகள் உயர்ந்து 7,353.65-ஆகவும் இருந்தன.
அமெரிக்க பங்குசந்தைகள் ஏற்றத்தில் முடிந்தது, ஆசிய பங்குசந்தைகள் உயர்வுடன் இருப்பது, தொடர்ந்து அந்நிய முதலீடுகள் அதிகரிப்பால் முக்கிய துறை பங்குகளின் விலை உயர்ந்து இருப்பது போன்ற காரணங்களால் இந்திய பங்குசந்தைகள் தொடர்ந்து உயர்வுடன் இருக்கின்றன.
இந்திய பங்குசந்தைகள் தவிர்த்து ஆசியாவின் இதர பங்குசந்தைகளான ஹாங்காங்கின் ஹேங்சேங், 0.24 சதவீதமும், ஜப்பானின் நிக்கி 0.86 சதவீதமும் உயர்ந்து இருந்தன.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|