பதிவு செய்த நாள்
03 ஜூன்2014
11:36
மும்பை : வங்கி வட்டி விகிதங்களில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. மத்தியில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்திற்கு பிறகு பங்குசந்தைகளில் தொடர்ந்து முன்னேற்றம் காணப்பட்டு வரும் வேளையில், ரிசர்வ் வங்கியின் கடன் வெளியீட்டு கூட்டம், கவர்னர் ரகுராம்ராஜன் தலைமையில் மும்பையில் நடந்தது. இதில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து வெளியிடப்பட்டுள்ளன.
அதில், ரொக்க கையிருப்பு விகிதம், ரெப்போ வட்டி விகிதங்களில் எந்த மாற்றமும் செய்யவில்லை, பழைய வட்டி விகிதமே தொடரும் என்றும் ரிசர்வ் வங்கி கூறியுள்ளது. அதேசமயம் எஸ்.எல்.ஆர்., வட்டி விகிதத்தை 0.5 சதவீதம் குறைத்துள்ளது. மேலும் 2014-15-ம் ஆண்டில் நாட்டின் வளர்ச்சி விகிதம் 5 முதல் 6 சதவீதம் என்ற அளவில் இருக்கும் என்றும், நுகர்வோர் பணவீக்கத்தை 2015ம் ஆண்டில் 8 சதவீதமாகவும், 2016ம் ஆண்டில் 6 சதவீதமாகவும் குறைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|