பதிவு செய்த நாள்
09 ஜூன்2014
00:47
மும்பை:சென்ற மே 30ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில், நாட்டின் அன்னியச் செலாவணி கையிருப்பு, 1,643 கோடி ரூபாய் (27.38 கோடி டாலர்) சரிவடைந்து, 18.74 லட்சம் கோடி ரூபாயாக (31,238 கோடி டாலர்) குறைந்துள்ளது என, ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, அன்னிய செலாவணி சொத்து மதிப்பு, 1,616 கோடி ரூபாய் (26.93 கோடி டாலர்) குறைந்து, 17.12 லட்சம் கோடி ரூபாயாக, (28,529 கோடி டாலர்) வீழ்ச்சி கண்டுள்ளது.மேலும், எஸ்.டீ.ஆர் மற்றும் சர்வதேச நிதியத்தில் நம் நாடு வைத்துள்ள செலாவணிகளின் கையிருப்பு முறையே, 33 லட்சம் டாலர் மற்றும் 12 லட்சம் டாலர் சரிவடைந்துள்ளது. அதேசமயம், கையிருப்பில் உள்ள தங்கத்தின் மதிப்பில் மாற்றம் எதுவுமின்றி, 2,096 கோடி டாலர் என்ற அளவிலேயே உள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|