பதிவு செய்த நாள்
18 ஜூன்2014
23:35
மும்பை:ஈராக் கலவரம் காரணமாக, இந்திய பங்கு வர்த்தகம், கடந்த சில நாட்களாக ஊசலாட்டத்தில் உள்ளது.நேற்று, சில்லரை முதலீட்டாளர்கள் லாப நோக்கம் கருதி, பங்குகளை அதிகளவில் விற்பனை செய்ததையடுத்து, ‘சென்செக்ஸ்’ ஒரு சதவீதத்திற்கும் அதிகமாக சரிவடைந்தது.
ஜப்பான் தவிர்த்த இதர ஆசியப் பங்குச் சந்தைகளிலும், வர்த்தகம் சுணக்கமாகவே இருந்தது. இருப்பினும், அமெரிக்க ரிசர்வ் வங்கியின், நிதி கொள்கை அறிவிப்பை எதிர்பார்த்து, ஐரோப்பிய பங்குச் சந்தைகளில் வர்த்தகம் விறுவிறுப்புடன் காணப்பட்டது.நேற்றைய வியாபாரத்தில், ரியல் எஸ்டேட், எரிசக்தி, எண்ணெய் மற்றும் எரிவாயு துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளின் விலை மிகவும் சரிவடைந்தது.
மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண், வர்த்தகம் முடியும் போது, 274.94 புள்ளிகள் வீழ்ச்சி கண்டு, 25,246.25 புள்ளிகளில் நிலைகொண்டது.‘சென்செக்ஸ்’ கணக்கிட உதவும், 30 நிறுவனங்களுள், பெல், டி.சி.எஸ்., என்.டி.பி.சி., உள்ளிட்ட, 23 நிறுவனப் பங்குகளின் விலை சரிவடைந்தும், சிப்லா, ஹிண்டால்கோ, கெயில் உள்ளிட்ட, 7 நிறுவனப் பங்குகளின் விலை உயர்ந்தும் இருந்தன.தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண், ‘நிப்டி’, 73.50 புள்ளிகள் சரிவடைந்து, 7,558.20 புள்ளிகளில் நிலைபெற்றது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|