பதிவு செய்த நாள்
20 ஜூன்2014
00:49
மும்பை:நேற்று ஒரே நாளில், அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு, 31 காசுகள் அதிகரித்தது.நேற்று முன்தினம் ரூபாய் மதிப்பு, 60.40 ஆக இருந்தது.
நேற்று அன்னியச் செலாவணி வர்த்தகத்தின் துவக்கத்தில், ரூபாய் மதிப்பு, 60.10 ஆக
காணப்பட்டது. இந்த மதிப்பு, வர்த்தகத்தின் இடையே, 59.86 வரை உயர்ந்தது. வர்த்தகத்தின் இறுதியில், ரூபாய் மதிப்பு, முன்தினத்தை விட, 0.53 சதவீதம் (31 காசுகள்) அதிகரித்து, 60.09ல் நிலை கொண்டது.அமெரிக்க மத்திய வங்கியின் வெளிச்சந்தை குழு, மாதாந்திர கடன்
பத்திரங்கள் வாங்கும் திட்டத்தில், 1,000 கோடி டாலரை குறைத்தது.
மேலும், பொருளாதாரம் எழுச்சி கண்டு வரும் நிலையில், தற்போதைய வட்டி விகிதம், நீடிக்கும் என, தெரிவித்தது.இதனால், இந்தியா உள்ளிட்ட வளரும் நாடுகளில், அன்னிய நிதி நிறுவனங்களின் முதலீடு அதிகரித்தது. இது, டாலருக்கு நிகரான ரூபாய் உள்ளிட்ட, இதர செலாவணிகளின் மதிப்பு உயர வழி வகுத்தது.நடப்பாண்டில், இதுவரை, அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு, 2.85 சதவீதம் உயர்ந்து உள்ளது.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|