பதிவு செய்த நாள்
29 ஜூன்2014
00:43
விருதுநகர்:விருதுநகர் மார்க்கெட்டில் சர்க்கரை, பருப்பு விலைகள் உயர்ந்தன. ஆனால், எண்ணெய் விலையில் மாற்றமில்லை.
எண்ணெய் மார்க்கெட்டில், கடந்த வாரத்தைப் போன்றே கடலை எண்ணெய்(15 கிலோ டின்) 1,300, நல்லெண்ணெய் 3,200 , சன்பிளவர் எண்ணெய் 1,200, பாமாயில் 1,020 ரூபாயாக உள்ளது. 80 கிலோ நிலக்கடலை பருப்பு 4,300 , 100 கிலோ கடலை புண்ணாக்கு 4,100 ரூபாயாக உள்ளது.
சர்க்கரை விலை உயர்ந்தது: 100 கிலோ சர்க்கரை மூடை 3,275 ரூபாயாக உள்ளது. கடந்தவாரத்தைவிட, மூடைக்கு 40 ரூபாய் உயர்ந்துஉள்ளது. இறக்குமதிவரி 13 சதவீதத்தில் இருந்து 40 சதவீதமாக அதிகரிக்கப்பட்டதே இதற்கு காரணம். 90 கிலோ மைதா, 90 கிலோ ரவை தலா 3,040 ரூபாயாக உள்ளது. 55 கிலோ பொரிகடலை 2,410 ரூபாயாக உள்ளது.
100 கிலோ பர்மா உளுந்தில் பொடிவகை 5,050, பருவட்டு 6,000 , நாட்டு உளுந்து 6,600 ரூபாய்க்கு விற்பனையானது. 100 கிலோ உளுத்தம் பருப்பில் பர்மா பொடிவகை 7,000, பருவட்டு வகை 7,500,நாடு வகை 8,500 ரூபாய்க்கு விற்பனையானது.இவற்றின் விலை மூடைக்கு 250 ரூபாய் முதல் 300 ரூபாய் வரை அதிகரித்துள்ளது. 100 கிலோ துவரம் பருப்பில் நாடுவகை 6,900, இரண்டாம் வகை 5,800, பொடி வகை 5,600 ரூபாய்க்கு விற்பனையானது. 100 கிலோ முதல் ரக பாசிப்பருப்பு 8,300, இரண்டாம் ரகம் 8,100 ரூபாயாக உள்ளது. இது மூடைக்கு 100 ரூபாய் உயர்ந்துள்ளது. 100 கிலோ முதல்ரக நாட்டு வத்தல் 6,000 முதல் 6,100 ரூபாய் வரையும், 2வது ரகம் 5,200 முதல் 5,500 ரூபாய் வரையும் விற்பனையானது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|