பதிவு செய்த நாள்
05 ஜூலை2014
02:03
நடப்பு 2013–14ம் காபி பருவத்தில் (அக்., – செப்.,), அரபிகா காபி உற்பத்தி, இதுவரை இல்லாத அளவிற்கு, 60ஆயிரம் டன்னாக குறையும் என,மதிப்பிடப்பட்டுள்ளது. இது, கடந்த பருவத்தில், 80 ஆயிரம் டன்னாக இருந்தது. வெண் தண்டு துளைப்பான் என்ற பூச்சித் தாக்குதலால், அரபிகா காபி அதிகம் விளையும் கர்நாடகாவில், அதன் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
நடப்பு ஜூலையில் பருவ மழை மேலும் தள்ளிப்போகும் பட்சத்தில், பூச்சித் தாக்குதல் அதிகரித்து, மதிப்பீட்டை விட, உற்பத்தி மேலும் குறையும் என, இத்துறை சார்ந்தவர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.இதுகுறித்து, கர்நாடகா பெருந்தோட்ட பண்ணையாளர்கள் கூட்டமைப்பு (கே.பி.ஏ.,) தலைவர் கோவிந்தப்ப ஜெயராம் கூறியதாவது:கர்நாடகாவில் சிக்மகளுர், ஹசன், கொடுகு மாவட்டங்களில், அரபிகா காபி பயிர், பூச்சி தாக்குதலால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஜூன் மாதம், மழை பொழிவு, 20 சதவீதம் குறைந்துள்ளது. வெப்பம்:இது, நடப்பு ஜூலையில், 30–40 சதவீதமாக உயர்ந்தால், உற்பத்தி, வெகுவாக குறையும். கடந்த ஆண்டு, அக்., முதல் ஏப்., வரை தட்பவெப்பம், தொடர்ந்து வறட்சியாக இருந்தது. ஏப்., –மே மாதங்களில், 38 டிகிரி செல்சியஸ் வெப்பம் காணப்பட்டது. இதனால், பூச்சிகளின் இனப்பெருக்கம் அதிகரித்து, காபி பயிர் பாதிக்கப்பட்டுள்ளது. மழை பெய்தால் தான், பூச்சி தாக்குதல் குறைந்து, காபி உற்பத்தி உயரும். இவ்வாறு அவர் கூறினார்.
காபி ஏற்றுமதியாளர்கள் கூட்டமைப்பு தலைவர் ரமேஷ் ராஜா கூறியதாவது:மூலப்பொருட்கள் விலை மற்றும் ஊதிய உயர்வால், அரபிகா காபி உற்பத்தியாளர்கள் ஏற்கனவே நெருக்கடியில் உள்ளனர். இப்பிரச்னையில், அரசு மற்றும் காபி வாரியம் உடனடியாக நடவடிக்கை எடுக்காவிட்டால், அடுத்த 10 ஆண்டுகளில், அரபிகா காபி வரைபடத்தில், இந்தியாவை தேடும் நிலை உருவாகும். அரபிகா காபி உற்பத்தி, 30 ஆயிரம் டன்னாகவும் குறையக் கூடும்.
கொள்கை:கடந்த 10 ஆண்டுகளாக வெண் தண்டு துளைப்பான் பூச்சியை பொருட்படுத்தாமல் விட்டு விட்டனர். இனியாவது, அதை கட்டுப்படுத்த, அரசு கொள்கை திட்டம் வகுக்கவேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.
– பிசினஸ் ஸ்டாண்டர்ட் உடன் இணைந்து –
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|