பதிவு செய்த நாள்
10 ஜூலை2014
00:34
நாட்டின் முன்னணி தொழில் நிறுவனங்கள், தங்கள் வர்த்தகத்தை பெருக்குவதற்காக ஊடகங்களில் செய்யும் விளம்பரச் செலவுகளில், 30 சதவீதம் வீணடிக்கப்படுவதாகவும், மூன்றில் ஒரு பங்கு விளம்பரங்கள், தங்கள் இலக்கை அடைவதில் தோல்வியை தழுவுவதாகவும், தனியார் நிறுவனம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் தெரிய வந்துள்ளது.
தோல்விஇதுகுறித்து, நீல்சன் இந்தியா என்ற தனியார் நிறுவனம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:முன்னணி தொழில் நிறுவனங்கள் பலவும், தங்கள் வர்த்தகத்தை பெருக்க, ஊடகங்களில் விளம்பரம் செய்கின்றன.ஆண்டுக்கு விளம்பரங்களுக் காக மட்டும், 30 ஆயிரம் கோடி ரூபாய் செலவழிக்கப்படுகிறது.ஆனால், இதில், 9,000 கோடி ரூபாய் வரை வீணடிக்கப்படுகிறது. அதாவது, 30 சதவீத விளம்பரங்கள் வெற்றியை தேடித் தருவதில்லை. மூன்றில் ஒரு பங்கு விளம்பரங்கள், தங்கள் இலக்கை அடைவதில் தோல்வியைத் தழுவுகின்றன.
உலக அளவில், நிறுவனங்கள் செய்யும் விளம்பரங்களில், 15 முதல், 30 சதவீதம் தோல்வியில் முடிகின்றன. இதில், இந்தியாவில், அதிகபட்சமாக, 30 சதவீத விளம்பரங்கள் தங்கள் இலக்கை அடைய தவறுகின்றன.கடந்த, 10 ஆண்டுகளில், ‘டிவி’ சேனல்களின் எண்ணிக்கை, 6 மடங்கு அதிகரித்துள்ளது. நாட்டில், 10 ஆண்டுகளுக்கு முன், 130 ‘டிவி’ சேனல்கள் மட்டுமே செயல்பட்ட நிலையில், தற்போது, இதன் எண்ணிக்கை, 788 ஆக உயர்ந்துள்ளது.
காட்சி ஊடகங்களில் செய்யப்படும் விளம்பரங்களில், 30 சதவீத விளம்பரங்கள் உரிய பலனை அளிப்பதில்லை. இந்த அடிப்படையில், ஆண்டு க்கு, 9,000 கோடி ரூபாய் வீணடிக்கப்படுகிறது. அறிவுறுத்தல்அண்மை காலங்களில், காட்சி ஊடகங்கள், சமூக வலைத்தலங்களின் பயன்பாடு அதிகரித்துள்ளது.
எனினும், சில முன்னணி தொழில் நிறுவனங்கள், ‘பிராண்ட் என்ற மாய பிம்பத்தை தோற்றுவிக்கும் விளம்பரங்களை நம்புவதை விட, வாடிக்கையாளர்களின் தேவையை அறிந்து செயல்படுதலே அவசியம்’ என, தங்கள் விற்பனை பிரிவு அதிகாரிகளுக்கு அறிவுறுத்த துவங்கியுள்ளன.இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
– நமது நிருபர் –
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|