பதிவு செய்த நாள்
18 ஜூலை2014
00:21
நாமக்கல்:ரம்ஜான் நோன்பு, எதிரொலியாக, தமிழகம் மற்றும் கேரளாவில், முட்டை கொள்முதல் விலை, 300 காசாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.நாமக்கல்லில், நேற்று, தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் நடந்தது. அதில், முட்டை உற்பத்தி, மார்க்கெட் நிலவரம் குறித்து பண்ணையாளர்கள் விவாதித்தனர்.அதன் பின், 320 காசுகளாக இருந்த முட்டை கொள்முதல் விலை, 20 காசு குறைக்கப்பட்டு, 300 காசாக நிர்ணயம் செய்யப்பட்டது. நாடு தழுவிய அளவில், ரம்ஜான் நோன்பு கடைபிடிக்கப்படுவதால், முட்டைக்கான தேவை குறைந்து, அதன் விலை சரிந்து வருகிறது.
நாட்டின் பிற மண்டலங்களில் முட்டை விலை (காசுகளில்) நிலவரம்:சென்னை, 355, பெங்களூரு, 340, மைசூர், 347, ஐதராபாத், 295, மும்பை, 335, விஜயவாடா, 302, கோல்கட்டா, 345, பர்வாலா, 270, டில்லி, 295. இவ்வாறு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.நாமக்கல்லில், நேற்று, நடந்த பண்ணையாளர்கள், வியாபாரி கள் ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில், முட்டைக் கோழி விலை, 57 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டது. பல்லடத்தில், நடந்த கறிக்கோழி உற்பத்தியாளர் ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில், அதன் விலை, 84 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டது.
மேலும் கம்மாடிட்டி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|