பதிவு செய்த நாள்
18 ஜூலை2014
00:24
புதுடில்லி:வெளிநாடுகளிலிருந்து வெங்காயத்தை இறக்குமதி செய்வதற்கு முன்பாக, அதன் ஏற்றுமதிக்கு தடை விதிக்க வேண்டும் என, மத்திய உணவுத் துறை அமைச்சர் ராம் விலாஸ் பஸ்வான், வர்த்தக அமைச்சகத்தை கேட்டு கொண்டுஉள்ளார்.உள்நாட்டில் விலை உயர்வை கட்டுப்படுத்தும் நோக்கில், மத்திய அரசு, ௧ லட்சம் டன் வெங்காயத்தை இறக்குமதி செய்ய முடிவு செய்துள்ளது. இதுதவிர, கடந்த மாதம், வெங்காயத்திற்கு குறைந்தபட்ச ஏற்றுமதி விலையை நிர்ணயம் செய்தது. அதையடுத்து, வெங்காயம் ஏற்றுமதி சரிவடைந்துள்ளது.
இருப்பினும்,வெங்காயத்தை சிறிய அளவில் ஏற்றுமதி செய்வது தொடர்ந்து வருகிறது. இது, முற்றிலும் தடுக்கப்பட வேண்டும். எனவே, வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்வதற்கு முன்பாகவே, வெங்காயம் ஏற்றுமதிக்கு தடை விதிக்க வேண்டும் என, வர்த்தக அமைச்சகத்தை, பஸ்வான் கேட்டு கொண்டுள்ளார். மகாராஷ்டிராவில் உள்ள லசல்கான் மொத்த விலை சந்தையில், ஒரு கிலோ வெங்காயத்தின் விலை, நேற்று, 20.15 ரூபாயாக அதிகரித்துள்ளது. இது, கடந்த மாதம் இதே நாளில், விற்பனையான ஒரு கிலோ வெங்காயத்தின் விலையை (13.25 ரூபாய்) விட, 50 சதவீதத்திற்கும் அதிகமாகும்.
டில்லியில், மே மாதத்துடன் ஒப்பிடுகையில், சில்லரை விற்பனையில், ஒரு கிலோ வெங்காயத்தின் விலை, தற்போது, இரண்டு மடங்கு உயர்ந்து, 30–40 ரூபாயை எட்டியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. சென்ற 2013–14ம் பயிர் பருவத்தில் (ஜூலை–ஜூன்), வெங்காயம் உற்பத்தி, 192 லட்சம் டன்னாக அதிகரித்திருக்கும் என, மதிப்பிடப்பட்டுள்ளது. இது, இதற்கு முந்தைய 2012–13ம் பருவத்தில், 168 லட்சம் டன்னாக இருந்தது.சென்ற 2013–14ம் நிதியாண்டில், வெங்காயம் ஏற்றுமதி, 13.58 லட்சம் டன்னாக குறைந்துள்ளது. இது, இதற்கு முந்தைய நிதியாண்டில், ௧௮.௨௨ லட்சம் டன்னாக அதிகரித்து காணப்பட்டது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|