பதிவு செய்த நாள்
21 ஜூலை2014
10:54
மும்பை : வாரத்தின் முதல்நாளான இன்று(ஜூலை 21ம் தேதி) இந்திய பங்குசந்தைகள் ஏற்றத்துடன் துவங்கியுள்ளன. நடப்பாண்டுக்கான முதல்காலாண்டு நிதிநிலை அறிக்கையை ஒவ்வொரு நிறுவனங்களும் வெளியிட்டு வருகின்றன. குறிப்பாக ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் லாபம் ரூ.5,957 கோடியாக இருப்பதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் இவைதவிர்த்து மற்ற நிறுவனங்களும் தங்களது நிதிநிலை அறிக்கையை வெளியிட்டு வருகின்றன. இதன்காரணமாக அந்நிறுவன பங்குகளை முதலீட்டாளர்கள் அதிகளவு வாங்க துவங்கி இருப்பதுடன், அந்நிய முதலீடும் அதிகரித்து வருவதால் பங்குசந்தைகளில் ஏற்றம் காணப்படுகின்றன. இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில் மும்பை பங்குசந்தையான சென்செக்ஸ் குறியீட்டு எண் 173.83 புள்ளிகள் உயர்ந்து 25,815.36-ஆகவும், தேசிய பங்குசந்தையான நிப்டி 42.80 புள்ளிகள் உயர்ந்து 7,706.70-ஆகவும் இருந்தன.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|