பதிவு செய்த நாள்
22 ஜூலை2014
02:23
புதுடில்லி: இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (ஐ.ஓ.சி.,), பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் (பீ.பி.சி.எல்.,) மற்றும் இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் (எச்.பி.சி.எல்.,) ஆகிய மூன்று பொதுத் துறை நிறுவனங்களின் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு திறன், வரும் 2016–17ம் நிதியாண்டிற்குள், 18.53 கோடி டன்னாக அதிகரிக்கும் என, மத்திய எண்ணெய் அமைச்சர் தர்மேந்திர பிரதான் லோக்சபாவில் தெரிவித்தார்.ஐ.ஓ.சி.,இது குறித்து அவர் மேலும் கூறியதாவது:மேற்கண்ட மூன்று பொதுத்துறை நிறுவனங்களுக்கு சொந்தமாக, 19 சுத்திகரிப்பு ஆலைகள் உள்ளன. அவற்றின், மொத்த எண்ணெய் சுத்திகரிப்பு திறன், தற்போது, 13.50 கோடி டன்னாக உள்ளது.
குறிப்பாக, சந்தைப் பங்களிப்பில் முதலிடத்தில் உள்ள, இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தின், 7 ஆலைகள் வாயிலான கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு திறன், தற்போது, 5.42 கோடி டன்னாக உள்ளது.ஒடிசா பாரதீப் பகுதியில், 29,777 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டு வரும், புதிய ஆலைகள் மூலம், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனின், எண்ணெய் சுத்திகரிப்பு திறன், நடப்பாண்டில், கூடுதலாக, 1.50 கோடி டன் அதிகரிக்க உள்ளது.மேலும், நடப்பு நிதியாண்டில், எச்.பி.சி.எல்., நிறுவனம், மும்பையில் உள்ள அதன் ஆலைகளின் சுத்திகரிப்பு திறனை, 17 லட்சம் டன்னிலிருந்து, 82 லட்சம் டன்னாகவும், விசாகப்பட்டினத்தில் உள்ள ஆலைகளின் திறனை, 83 லட்சம் டன்னிலிருந்து, 90 லட்சம் டன்னாகவும் அதிகரிக்க உள்ளது.
பீ.பி.சி.எல்., அதன் மும்பை ஆலைகளின் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு திறனை, 15 லட்சம் டன்னிலிருந்து, 1.35 கோடி டன்னாகவும், பினா ஆலையின் சுத்திகரிப்பு திறனை, 60 லட்சம் டன்னிலிருந்து, 72 லட்சம் டன்னாகவும், உயர்த்த உள்ளது.விரிவாக்கம்புதிய ஆலைகள் மற்றும் விரிவாக்க திட்டங்களால், வரும் 2016–17ம் நிதியாண்டிற்குள், பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்களின் சுத்திகரிப்பு திறன், 37 சதவீதம் அதிகரித்து, 18.53 கோடி டன்னாக உயரும்.பொதுத் துறை நிறுவனங்கள் தவிர்த்து, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், எஸ்ஸார் ஆயில் உள்ளிட்ட மூன்று தனியார் துறை நிறுவனங்களும் எண்ணெய் சுத்திகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன.இவ்வாறு தர்மேந்திர பிரதான் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|