பதிவு செய்த நாள்
22 ஜூலை2014
23:34
மும்பை:சாதகமான சர்வதேச நிலவரங்கள் மற்றும் அன்னிய நிதி நிறுவனங்கள், ஆர்வத்துடன் இந்திய நிறுவனங்களின் பங்குகளில் முதலீடு மேற்கொண்டது போன்றவற்றால், ‘சென்செக்ஸ், 1.21 சதவீதம் அதிகரித்து, மீண்டும், 26 ஆயிரம் புள்ளிகளை கடந்து சாதனை படைத்தது.
ஐரோப்பிய சந்தைகள், மூன்று நாட்கள் சரிவிற்கு பிறகு, நேற்று ஏற்றம் கண்டது. இதர ஆசியப் பங்குச் சந்தைகளிலும் வர்த்தகம் நன்கு இருந்தது. இதன் தாக்கம் இந்திய பங்குச் சந்தைகளிலும் எதிரொலித்தது. நேற்றைய வியாபாரத்தில், தகவல் தொழில்நுட்பம், எண்ணெய், எரிவாயு, நுகர்வோர் சாதனங்கள் ஆகிய துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளுக்கு அதிக தேவை காணப்பட்டது.
அதேசமயம், மின்சாரம் மற்றும் பொறியியல் துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகள் குறைந்த விலைக்கு கைமாறின.மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண், வர்த்தகம் முடியும் போது, 310.63 புள்ளிகள் அதிகரித்து, 26,025.80 புள்ளிகளில் நிலைகொண்டது.
‘சென்செக்ஸ் கணக்கிட உதவும், 30 நிறுவனங்களுள், பார்தி ஏர்டெல், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், விப்ரோ உள்ளிட்ட, 25 நிறுவனப் பங்குகளின் விலை உயர்ந்தும், மாருதி, எல் அண்டு டி உள்ளிட்ட, 5 நிறுவனப் பங்குகளின் விலை சரிவடைந்தும் இருந்தன.தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண், ‘நிப்டி 83.65 புள்ளிகள் உயர்ந்து, 7,767.85 புள்ளிகளில் நிலைபெற்றது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|