பதிவு செய்த நாள்
03 ஆக2014
00:43
புதுடில்லி:இந்தியாவில், நிறுவனங்கள் இடையிலான இணைத்தல் மற்றும் கையகப்படுத்தல் நடவடிக்கைகளின் மதிப்பு, 3,200 கோடி டாலராக (1.92 லட்சம் கோடி ரூபாய்) அதிகரிக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
சர்வதேச பொருளாதார மந்த நிலை, கொள்கை திட்டங்களில் சுணக்கம் போன்றவற்றால், கடந்த சில ஆண்டுகளாக, நிறுவனங்கள், முதலீட்டு நடவடிக்கைகளில் ஆர்வம் காட்டாமல் இருந்தது.இந்நிலையில், மத்தியில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நிலையான அரசு ஏற்பட்டதையடுத்து, நிறுவனங்களின் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விரிவாக்க முதலீட்டு திட்டங்கள் சூடுபிடிக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
இதனை உறுதிப்படுத்தும் விதமாக, நடப்பாண்டின் முதல் அரையாண்டில் (ஜன., – ஜூன்), இணைத்தல் மற்றும் கையகப்படுத்தல் நடவடிக்கைகளின் மதிப்பு, 1,710 கோடி டாலராக அதிகரித்துள்ளது. இது, கடந்த ஆண்டு இதே காலத்துடன் ஒப்பிடுகையில் (1,116 கோடி டாலர்) 47.4 சதவீதம் அதிகமாகும்.குறிப்பாக, ஏப்ரல் – ஜூன் வரையிலான காலாண்டில், இணைத்தல் நடவடிக்கை, 1,340 கோடி டாலராக எகிறிஉள்ளது. இது, முந்தைய ஜன., – மார்ச் காலாண்டில், வெறும், 370 கோடி டாலராக இருந்தது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|