பதிவு செய்த நாள்
05 ஆக2014
06:24
புதுடில்லி:நடப்பு நிதியாண்டில், நாட்டின் நிதி பற்றாக்குறை, நிர்ணயிக்கப்பட்ட இலக்கான, 4.1 சதவீதம் என்ற அளவிலேயே இருக்கும் என, மத்திய நிதி செயலர் அரவிந்த் மயாராம் நம்பிக்கை தெரிவித்தார்.இதுகுறித்து, அவர் மேலும் கூறியதாவது:நடப்பு, 2014 – 15ம் நிதியாண்டில், நிதி பற்றாக்குறையை, 4.1 சதவீதம் என்ற அளவில் வைத்திருக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதை எட்டுவது கடினமானது என்றாலும்; பொருளாதாரம் மந்த நிலையிலிருந்து மீண்டு வருவதற்கான அறிகுறிகள் தென்பட துவங்கியுள்ளன.
மேலும், மத்திய அரசு பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில், பட்ஜெட்டில் பல்வேறு துணிச்சலான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.இது போன்றவற்றால், இனி வரும் மாதங்களில், அரசின் வருவாய் சிறப்பான அளவில் அதிகரித்து, நாட்டின் நிதி பற்றாக்குறை, 4.1 சதவீதம் என்ற அளவில் இருக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.நாட்டின் பொருளாதார வளர்ச்சி, கடந்த இரண்டு நிதியாண்டுகளாக, 5 சதவீதத்திற்கும் கீழ் உள்ளது. இது, நடப்பு நிதியாண்டில், 5.4 – 5.9 சதவீதம் என்ற அளவில் இருக்கும் என, மதிப்பிடப் பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|