பதிவு செய்த நாள்
06 ஆக2014
06:08
தமிழகத்துக்கு கடலை பருப்பு, கொண்டக்கடலை ஆகியவற்றின் வரத்து அதிகரித்துள்ளதால், விலை குவிண்டாலுக்கு, 300 ரூபாய் வரை, சரிவு ஏற்பட்டுள்ளது.மகாராஷ்டிரா:தமிழகத்துக்கு கொண்டக்கடலை, கடலை பருப்பு ஆகியவை மகாராஷ்டிரா, குஜராத், பீகார், கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களில் இருந்து வருகிறது. கடந்த மாதம் வரை, தமிழகத்தின் பெரிய மார்க்கெட்டுகளான, சேலம் லீ பஜார், சென்னை, விருதுநகர் ஆகிய இடங்களுக்கு, வாரத்துக்கு, 80 லாரிகளில் மட்டும் கொண்டக்கடலை, கடலை பருப்பு ஆகியவை வந்தன.வட மாநிலங்களில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், வியாபாரிகள் இருப்பு வைத்திருந்த கொண்டக்கடலை, கடலை பருப்பை, அதிக அளவில் விற்பனை செய்து வருகின்றனர்.
இதனால், தமிழகத்துக்கு கடலை பருப்பு, கொண்டக்கடலை வரத்து அதிகரித்துள்ளது.கடந்த வாரம், வெளி மாநிலங்களில் இருந்து, 120 லாரி வரை, கடலை பருப்பு, கொண்டக்கடலை ஆகியவை வந்தன. வரத்து அதிகரித்ததை அடுத்து, தமிழகத்தில் கடலை பருப்பு, கொண்டக்கடலை ஆகியவற்றை இருப்பு வைத்திருந்த வியாபாரிகள், அவற்றை விற்பனைக்கு அனுப்பி வருகின்றனர்.இதன் காரணமாக, மார்க்கெட்டுக்கு கடலை பருப்பு வரத்து அதிகரித்து, விலை, குவிண்டாலுக்கு, 300 ரூபாய் வரை குறைந்துள்ளது.சில்லரை விலை:கடந்த வாரம், மொத்த விலையில், கடலை பருப்பு குவிண்டால், முதல் ரகம், 5,100 ரூபாய்க்கு விற்றது, 4,800 ரூபாயாகவும், இரண்டாம் ரகம் குவிண்டால், 4,800 ரூபாய்க்கு விற்றது, 4,500 ரூபாயாகவும் சரிந்துள்ளது.
இதையடுத்து, சில்லரை விலையில், கிலோவுக்கு, 2 ரூபாய் வரை குறைந்துள்ளது.கடந்த வாரம், முதல் ரகம் கிலோ, 54 ரூபாய்க்கு விற்றது, நேற்று, 52 ரூபாயாகவும், இரண்டாம் ரகம் கிலோ, 50 ரூபாய்க்கு விற்றது, 48 ரூபாயாக சரிந்துள்ளது. கொண்டக்கடலை, கடலை பருப்பு வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால், கடலை பருப்பு, கொண்டக்கடலை, பொரி கடலை, கடலை மாவு ஆகியவற்றின் விலை குறையும் என, வியாபாரிகள் தெரிவித்தனர்.– நமது நிருபர் –
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|