பதிவு செய்த நாள்
09 ஆக2014
06:09
மும்பை :ஈராக்கில் கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக, வான்வழி தாக்குதல் நடத்த, அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா உத்தரவிட்டு உள்ளார்.இதையடுத்து, சர்வதேச அளவில் பங்குச் சந்தைகள் சுணக்கம் கண்டன. இதன் தாக்கம் இந்திய பங்குச் சந்தைகளிலும் எதிரொலித்தது.இந்நிலையில், சில்லரை முதலீட்டாளர்களும் அதிகளவில் பங்குகளை விற்பனை செய்தனர். இது போன்றவற்றால், 'சென்செக்ஸ்' மற்றும் 'நிப்டி' முறையே, 1 சதவீதத்திற்கும் மேல் சரிவை கண்டது.நேற்றைய வியாபாரத்தில், ரியல் எஸ்டேட், உலோகம், மின்சாரம் உள்ளிட்ட, பல துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகள், குறைந்த விலைக்கு கைமாறின. அதேசமயம், நுகர்பொருட்கள் மற்றும் மருந்து துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளுக்கு ஓரளவிற்கு தேவை காணப்பட்டது.
மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண், வர்த்தகம் முடியும் போது, 259.87 புள்ளிகள் வீழ்ச்சி கண்டு, 25,329.14 புள்ளிகளில் நிலைபெற்றது. 'சென்செக்ஸ்' கணக்கிட உதவும், 30 நிறுவனங்களுள், சேசா ஸ்டெர்லைட், டாட்டா பவர், பெல் உள்ளிட்ட, 24 நிறுவனப் பங்குகளின் விலை சரிவடைந்தும், பார்தி ஏர்டெல், டாக்டர் ரெட்டீஸ், ஐ.டி.சி., உள்ளிட்ட, 6 நிறுவனப் பங்குகளின் விலை உயர்ந்தும் இருந்தன.தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண், 'நிப்டி', 80.70 புள்ளிகள் சரிவடைந்து, 7,568.55 புள்ளிகளில் நிலைகொண்டது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|