பதிவு செய்த நாள்
26 ஆக2014
00:53
புதுடில்லி,: நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான முதல் காலாண்டில், நாட்டின் சேவை துறையில் மேற்கொள்ளப்பட்ட அன்னிய நேரடி முதலீடு, 22 சதவீதம் சரிவடைந்து, 4,440 கோடி ரூபாயாக (74 கோடி டாலர்) குறைந்துள்ளது என, தொழிற்கொள்கை மற்றும் மேம்பாட்டு துறை (டி.ஐ.பி.பி.,) தெரிவித்துள்ளது.
சேவை துறை என்பது, வங்கி, காப்பீடு, அயல்பணி ஒப்படைப்பு, கூரியர், தொழில்நுட்ப ஆய்வு, ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு ஆகியவற்றை உள்ளடக்கியதாகும். சென்ற நிதியாண்டின் இதே காலாண்டில், மேற்கண்ட துறைகளில் மேற்கொள்ளப்பட்ட அன்னிய நேரடி முதலீடு, 5,700 கோடி ரூபாயாக (95 கோடி டாலர்) அதிகரித்து காணப்பட்டது. அன்னிய நேரடி முதலீட்டை அதிகளவில் கவரும் வகையில், மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.இதன் ஒரு பகுதியாக, காப்பீட்டு துறையில் மேற்கொள்ளப்படும் அன்னிய நேரடி முதலீட்டை தற்போதைய, 26 சதவீதத்திலிருந்து, 49 சதவீதமாக உயர்த்தி கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சேவை துறையின் பங்களிப்பு, 60 சதவீதமாக உள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|