பதிவு செய்த நாள்
04 செப்2014
01:16
புதுடில்லி: நடப்பாண்டு ஜூலை மாதத்தில், இந்தியாவில் உள்நாட்டு விமான பயணிகள் எண்ணிக்கை, கடந்தாண்டின் இதே மாதத்தை விட, 6 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது என, சர்வதேச விமான போக்குவரத்து கூட்டமைப்பு (ஐ.ஏ.டி.ஏ.,) தெரிவித்துள்ளது.
மத்தியில் நிலையான புதிய அரசு அமைந்ததையடுத்து, வர்த்தக நடவடிக்கைகள் மேம்பட்டுள்ளன. இருப்பினும், மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட சில சிக்கன நடவடிக்கைகளை அடுத்து, வளரும் நாடுகளுடன் ஒப்பிடுகையில், இந்தியாவில் விமான போக்குவரத்து சந்தை குறைந்த அளவிலேயே வளர்ச்சி கண்டுள்ளது.குறிப்பாக, சீனா மற்றும் ரஷ்யாவில், உள்நாட்டு விமான பயணிகள் போக்குவரத்து முறையே, 8.8 சதவீதம் மற்றும் 9.9 சதவீதம் அதிகரித்துள்ள நிலையில், இந்தியாவில், 6 சதவீதம் மட்டுமே உயர்ந்துள்ளது.
மதிப்பீட்டு மாதத்தில், சர்வதேச விமான போக்குவரத்து 5.5 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது. பொருளாதார சூழல் மேம்பாட்டால், ஆசிய–பசிபிக் பிராந்திய நாடுகளின் விமான நிறுவனங்கள் அதிக பலனடைந்துள்ளன.நடப்பாண்டில், விமான நிறுவனங்களின் லாபம், 1,800 கோடி டாலராக இருக்கும் எனவும், அதேசமயம், நிகர லாப வரம்பு 2.4 சதவீதம் அளவிற்கே இருக்கும் எனவும், ஐ.ஏ.டி.ஏ., தெரிவித்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|