பதிவு செய்த நாள்
04 செப்2014
02:32
புதுடில்லி :வரும் 2015ம் ஆண்டிற்குள், இந்தியாவில், ஆன் – லைன் விளம்பரத் துறை சந்தை, 30 சதவீதம் வளர்ச்சி கண்டு, 3,575 கோடி ரூபாயை எட்டும் என, மதிப்பிடப்பட்டுள்ளது.
குறிப்பாக, தொலைத்தொடர்பு, நுகர்பொருட்கள் மற்றும் நுகர்வோர் சாதனங்கள் மற்றும் இணையதள வணிக நிறுவனங்கள் ஆன் – லைன் மூலம் விளம்பரம் மேற்கொள்வதில் அதிக நாட்டம் கொண்டுள்ளதால், இத்துறை சந்தை மதிப்பு சிறப்பான அளவில் வளர்ச்சி காணும் என, மதிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கு எடுத்துக்காட்டாக, 2010 – 11ம் நிதியாண்டில், 1,140 கோடி ரூபாயாக இருந்த ஆன் – லைன் விளம்பர துறை சந்தை மதிப்பு, 2012 – 13 மற்றும் 2013 – 14ம் நிதியாண்டுகளில் முறையே, 2,260 கோடி மற்றும் 2,750 கோடி ரூபாய் என்ற அளவில் சிறப்பாக அதிகரித்துள்ளது.கடந்த 2010 – 11 முதல் 2012 – 13ம் நிதியாண்டு வரையிலான காலத்தில், ஆன் – லைன் விளம்பர பிரிவின் ஒட்டுமொத்த ஆண்டு வளர்ச்சி, 25 சதவீதமாக உள்ளது.
கடந்த 2013ம் ஆண்டு நிலவரப்படி, இந்தியாவில், அனைத்து வகை ஊடகங்கள் வாயிலாக மேற்கொள்ளப்பட்ட விளம்பர செலவு, 38,598 கோடி ரூபாயாக உள்ளது. இது, இதற்கு முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில், 12 சதவீதம் அதிகமாகும்.மேற்கண்ட ஒட்டுமொத்த விளம்பர செலவில், தொலைக்காட்சிகளின் பங்களிப்பு, 44 சதவீதமாக உள்ளது என, ஐ.ஏ.எம்.ஏ.ஐ., – ஐ.எம்.ஆர்.பி., ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|