பதிவு செய்த நாள்
04 செப்2014
03:02
புதுடில்லி :கடந்த ஐந்து ஆண்டுகளில் முதன் முறையாக, நிலுவையில் உள்ள பங்குச் சந்தை முதலீட்டாளர்களின் புகார்கள் எண்ணிக்கை, கடந்த நிதியாண்டில், 10 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்துள்ளது.இதற்கு, ஆன் – லைன் மூலமான குறைதீர்க்கும் திட்டத்தை, ‘செபி அறிமுகப்படுத்தியதே முக்கிய காரணம் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, கடந்த நிதியாண்டில், பங்குச் சந்தை நிறுவனங்கள் தொடர்பாக, நிலுவையில் உள்ள முதலீட்டாளர்கள் புகார்களின் எண்ணிக்கை, 9,147ஆக குறைந்துள்ளது.
இது, 2012 – 13ம் நிதியாண்டில், 11,410ஆக இருந்தது. கடந்த 2008 – 09ம் நிதியாண்டில், நிலுவையில் உள்ள முதலீட்டாளர் புகார்கள் எண்ணிக்கை, 49,113 என்ற அளவில் மிகவும் அதிகரித்து காணப்பட்டது. இது, 2009 – 10ம் நிதியாண்டில், 37,880 ஆக குறைந்தது. 2010 – 11 மற்றும் 2011 – 12ம் நிதியாண்டுகளில் முறையே, இது மேலும் சரிவடைந்து, 28,653 மற்றும் 23,725ஆக குறைந்தது.இந்நிலையில், கடந்த நிதியாண்டில் தான், பங்குச் சந்தை முதலீட்டாளர்களின் புகார்கள் எண்ணிக்கை, 10 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|