பதிவு செய்த நாள்
08 செப்2014
00:25
புதுடில்லி: நடப்பாண்டில், இந்தியாவின் சூரியசக்தி மின் உற்பத்தி திறன், 900 மெகாவாட் அதிகரிக்கும் என, மெர்காம் கேப்பிட்டல் குழுமம் மறுமதிப்பீடு செய்துள்ளது.இக் குழுமத்தின், முந்தைய மதிப்பீட்டில், 1,000 மெகாவாட் உயரும் என, தெரிவிக்கப்பட்டிருந்தது.
சீனா, தைவான், மலேசியா மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளிலிருந்து, இறக்குமதி செய்யப்படும் சூரியசக்தி மின் உற்பத்தி உபகரணங்களுக்கு, பொருள் குவிப்பு வரி விதிப்பதில் நிச்சய மற்ற தன்மை நிலவுவது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், நடப்பாண்டில், சூரியசக்தி மின் உற்பத்தி திட்டங்களின் வளர்ச்சி குறைவாகவே இருக்கும் என, தற்போது தெரிவிக்கப்பட்டு உள்ளது.
நடப்பாண்டில் இதுவரையில், உள்நாட்டில், 500 மெகாவாட் அளவிற்கு சூரியசக்தி மின் உற்பத்தி திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, மெர்காம் கேப்பிட்டல் மேலும் தெரிவித்துள்ளது.
இதற்கிடையே, சூரியசக்தி மின் உற்பத்தி துறையில், அடுத்த 10 ஆண்டுகளில், 6.70 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாகும் எனவும், அப்போது இப்பிரிவிலான மின் உற்பத்தி, 1.45 லட்சம் மெகாவாட்டாக இருக்கும் எனவும், பிரிட்ஸ் டு இந்தியா மற்றும் டாட்டா பவர் சோலார் ஆகிய நிறுவனங்கள் இணைந்து நடத்திய ஆய்வில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|