பதிவு செய்த நாள்
09 செப்2014
02:48
புதுடில்லி:சென்ற 2012ம் ஆண்டில், இந்தியாவில், ஆடு, மாடு உள்ளிட்ட ஒட்டு மொத்த கால்நடைகளின் எண்ணிக்கை, 51.20 கோடியாக சரிவடைந்துள்ளது.இது, கடந்த 2007ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், 3.33 சதவீதம் குறைவாகும் என, மத்திய அரசு வெளியிட்டுள்ள, 19வது கால்நடை கணக்கெடுப்பு புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.அதில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது:கடந்த 2007 மற்றும் 2012ம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில், ஆடுகளின் எண்ணிக்கை, 3.82 சதவீதம் குறைந்து, 13.51 கோடியாகவும், செம்மறியாடுகளின் எண்ணிக்கை, 9.07 சதவீதம் வீழ்ச்சி கண்டு, 6.50 கோடியாகவும் சரிவடைந்துள்ளது.
அதேசமயம், கோழிகளின் எண்ணிக்கை, 12.39 சதவீதமும், கோவேறு கழுதைகளின் எண்ணிக்கை, 43.34 சதவீதமும் (1.90 லட்சம்) உயர்ந்துள்ளன.இவ்வாறு புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கால்நடைகள் குறித்த கணக்கெடுப்பு, ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை மேற்கொள்ளப்படுகிறது. அதன் அடிப்படையில் தான், அவற்றிற்கான கொள்கை திட்டங்கள் வகுக்கப்படுகின்றன.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|