பதிவு செய்த நாள்
14 செப்2014
06:33
மும்பை: இந்தியாவின் அன்னியச் செலாவணி கையிருப்பு, சென்ற 5ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில், 7,980 கோடி ரூபாய் (133 கோடி டாலர்) குறைந்து, 19.04 லட்சம் கோடி ரூபாயாக (31,731 கோடி டாலர்) சரிவடைந்துள்ளது என, ரிசர்வ் வங்கி, தெரிவித்துள்ளது.இது, முந்தைய வாரத்தில், 360 கோடி ரூபாய் (6 கோடி டாலர்) அதிகரித்து, 19.12 லட்சம் கோடி ரூபாயாக (31,864 கோடி டாலர்) இருந்தது.அன்னியச் செலாவணி சொத்து மதிப்பு மற்றும் தங்கத்தின் கையிருப்பு சரிவடைந்துள்ளதையடுத்து, அன்னியச் செலாவணி கையிருப்பு குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கணக்கீட்டு வாரத்தில், அன்னியச் செலாவணி சொத்து மதிப்பு, 103 கோடி டாலர் வீழ்ச்சி கண்டு, 29,036 கோடி டாலராக சரிவடைந்துள்ளது.பல வாரங்களாக மாற்றமின்றி இருந்து வந்த தங்கத்தின் கையிருப்பு, மதிப்பீட்டு வாரத்தில், 24 கோடி டாலர் குறைந்து, 2,093 கோடி டாலராக வீழ்ச்சி கண்டுள்ளது.இதே போன்று, எஸ்.டீ.ஆர்., மதிப்பு, 4 கோடி டாலர் குறைந்து, 434 கோடி டாலராகவும், சர்வதேச நிதியத்தில் நம்நாடு வைத்துள்ள செலாவணிகளின் கையிருப்பு, 1.6 கோடி டாலர் சரிவடைந்து, 167 கோடி டாலராகவும் உள்ளன.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|